பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முருகுசுந்தரம் என் தந்தை ஒரு சுயமரியாதைக்காரர். எங்கள் வீட்டுக்குக் குடியரசும், திராவிட நாடும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. குடியரசில் பாரதிதாசன் பாடல்களும், அவரைப் பற்றிய குறிப்புகளும் சில சமயங்களில் வெளியாகும், திராவிடநாடு இதழில், பாவேந்தரை மேலைநாட்டுப் புரட்சிக் கவிஞர்களான ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியவர்களோடும், மராட்டியக் காண்டேகரோடும் ஒப்பிட்டு அண்ணா எழுதிய கட்டுரைகளைப் படித்த போது பாவேந்தரைப் பற்றி அதிகம் சிந்திக்கத் தொடங்கினேன். மேட்டுர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற காலத்தில் புலவர் குழந்தை, புலவர் இரா. பெ. இராமச்சந்திரனார் போன்ற தமிழறிஞர்களைப் பொங்கல் விழாவின்போது அழைத்துப் பேச வைத்தோம். அவர்கள் பேச்சு பாவேந்தர் பாடல்களின் சில புதிய பரிமாணங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. எங்கள் பயிற்சிப் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த திரு. பாலகிருட்டிணன் பி.ஏ., எல்.டி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமைமிக்கவர். பாரதிதாசன் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். பாரதிதாசன் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பூந்தோட்டம்' என்ற பத்திரிகையில் வெளி யிட்டவர். அவருடைய தொடர்பால், பாவேந்தர் பாடல்களின் மீது எனக்கு அளவிறந்த மதிப்பும் பற்றும் ஏற்பட்டன. பிறகு பாவேந்தரின் நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். அவர் புதுவையிலிருந்து வெளியிட்ட குயில் கவிதை ஏடு பாவேந்தரின் படைப்புகளைத் தொடர்ந்து செல்லும் ஆவலைத் தூண்டி விட்டது. தமிழ் மறவர் பொன்னம்பலனார் பணிபுரிந்த அதே சேலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கி.பி. 1955ஆம் ஆண்டு தமிழாசிரியராக வேலை ஏற்றேன். அடுத்த ஆண்டு பள்ளி மாணவர்களைச் சுற்றுலாவுக்காக அழைத்துக் கொண்டு சென்றபொழுது (திசம்பர் 1956) புதுச்சேரியும் சென்றிருந்தேன். கையுறையாகச் சில கனிகளை வாங்கிக் கொண்டு மாணவர்களோடு பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாவேந்தர் இல்லத்துக்குச் சென்றேன். அன்று பாவேந்தர் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டுப் பிரம்புச் சாய்வு நாற்காலியில் ஒய்வாகப் படுத்திருந்தார். மாணவர் கூட்டத்தைப் பார்த்தவுடன் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. எங்களைப் பற்றி விசாரித்து விட்டு மாணவர்களை நோக்கி, தமிழை நன்றாகக் கற்க

  • இவர் இளங்கண்ணன் என்ற புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதுவார். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், சாகித்திய அகாடமியில் ஆங்கில மொழி பெயர்ப்பாளராகச் #axonsolbuscofilossomi. The Golden Anthology of Ancient Tamil Literature stopguujified சங்கப்பாடல்களை மூன்றுதொகுதிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்.