பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

члкзалѣей-есѣшвовареоѣаранъ 315 பாவேந்தருக்கு ரூ. 3000/- கொடுக்கப்பட்டது. திரைப்பட எழுத்தாளருக்கு அந்தக் காலத்தில அது பெரிய தொகை. சேலத்தில் படக்கம்பெனி இருக்கும்வரையில் பெரியார் வந்தாலும், பாவேந்தர் வந்தாலும் கம்பெனிக் கட்டிடத்திலேயே தங்குவர். படக்கம்பெனி சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகு கம்பெனிக்கு எதிரிலேயே ஒரு வீடெடுத்து அதில் குடும்பத்தோடு பாவேந்தர் குடியிருந்தார். வீட்டில் புலால் உணவு செய்தால் என்னை விருந்துக்கு அழைப்பார். சமையல்காரன் சேலத்தைச் சேர்ந்தவன்; நன்றாகச் சமைப்பவன். படப்பிடிப்பின்போது டி.என்.ராஜரத்னம் குடித்துவிட்டு வருவார். ஒருநாள் அதிக போதையோடு வந்து படுத்துவிட்டார். அவரை எழுப்ப முடியவில்லை. படப்பிடிப்புத் தடைபட்டது. பத்துக்குடம் தண்ணிரைத் தலையில் ஊற்றுங்கள் என்றார் பாவேந்தர். அப்படியே செய்து துவட்டிப் போதையைத் தெளிய வைத்தோம். பாவேந்தர் இரவில்தான் நீண்ட நேரம் எழுதுவார். அப்போது பிராந்தியைக் கொஞ்சங் கொஞ்சமாக ஊற்றிச் சோடாவில் கலந்து குடிப்பார். துணைக்குக் கறி வேண்டும். இரவுதான் எழுதுவதற்கு அமைதியான நேரம்’ என்று கூறுவார். விடிந்த பிறகு குளித்துச் சிற்றுண்டி அருந்திவிட்டுத் துங்குவார். கவி காளமேகம் படப்பிடிப்பின்போது அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு அவர் இறக்கும் வரையில் தொடர்ந்தது. தருமபுரிப் பக்கம் வந்தால் என் வீட்டில் வந்து ஓரிருநாள் தங்காமல் போக மாட்டார். பென்னாகரத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களிலும் அடிக்கடி வந்து பேசியிருக்கிறார். பாவேந்தர் எப்போதும் ஆரவாரமாகப் பேசமாட்டார்; நிதானமாகப் பேசி சுருக்கென்று குத்துவார். இவர் பாணியே தனி. பெரியாரைப் போல அஞ்சாமை மிக்கவர்; சொந்தச் சிந்தனைக்காரர் (Original Thinker). பென்னாகரம் தமிழ்ச் சங்கத்தில் பேசியபோது, "தமிழரசர்களால் தான் வைதீகம் வளர்ந்தது; நாடு கெட்டது. ஓரி, காரி, பேகன் எல்லாருமே மடையர்கள். பத்து சதுர மைலை ஆண்டுகொண்டு பத்துக் கூத்தியா வைத்திருந்தார்கள்' என்று புலவர்கள் நடுவிலே துணிச்சலோடு பேசினார். சில செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல், உள்ளத்தில் பட்டதைப் பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல்-பச்சையாகப் பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்தவரை இரண்டுபேர்தான். ஒருவர் பெரியார்; மற்றொருவர் பாரதிதாசன்.