பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பாவேந்தர் நினைவு போற்றுவோம் உணவு விடுதிக்குக் கவிஞரை அழைத்துச் சென்று உயர்ந்த மது வகைகளை எல்லாம் அவரைப் பருகுமாறு செய்தார். கவிஞருடன் நானும்-மற்றொரு தேசிய வார ஏட்டின் ஆசிரியரும் உடன் சென்றிருந்தோம். கம்பதாசன், கவிஞர் போதும் என்றாலும் விடாது வற்புறுத்தி நிரம்பப் பருகுமாறு செய்துவிட்டார். அப்போது கம்பதாசன் நூறுரூபாய் நோட்டுகளாகச் செலவிடும் வாய்ப்புப் பெற்றிருந்த காலம். 'என் வருமானமெல்லாம் கவிஞருக்கே! என் குருநாதருக்கே! என்று அவ்வப்போது முழங்கியபடி.ஆர்வத்தோடு செலவிட்டார். விடுதியிலிருந்து ஒரு பெரிய காரில் வீடு வந்தோம்! வரும் வழியிலேயே..... கவிஞருக்கு குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்தார். அப்பொழுது அவர் என்னை நோக்கிக் கூறினார்.'தம்பி கம்பதாசன் என்னிடத்தில் அன்புள்ளவன்-எனக்கும் இது பழக்கந்தான். ஆனால் அவன் உன்னை அழைத்தால் நீ அவனுடன் போகவேண்டாம். இது (குடி) எல்லாம் உனக்கு ஒத்துக்கொள்ளாது. என்ன நான் சொல்றதை மறந்து விடாதே நான் வருகிறேன்" என்று புறப்பட்டுச் சென்றார் அவர். தமக்கு மது, பழக்கமான ஒன்று என்றாலும்-என்னிடத்தில் வைத்திருந்த அன்பினால் கூறிய அறிவுரை என்பதை நான் மறுக்கவியலாது. இந்நிகழ்ச்சி 1947 இல் நிகழ்ந்தது. அதற்கு முதல் ஆண்டுதான் புரட்சிக்கவிஞரின் சீரிய தமிழ்த் தொண்டினைப் போற்றி-நிதியளிப்பு விழா ஒன்று அறிஞர் அண்ணாவின் பெரும் முயற்சியாலும், நாமக்கல் செல்லப்பர்திருவாரூர் டி.என்.இராமன் முதலானோர் உழைப்பாலும் நிகழ்ந்தது. அதுகாறும் தமிழகத்தில்-அப்படிப்பட்டதொரு விழாவோநிதியளிப்போ எந்தக் கவிஞர்க்கும் நடைபெற்றதில்லை. அண்ணாவால் சிறப்புற்றது அந்தப் பணியில் நானும் பங்குபெற்றிருந்தேன். கவிஞரின் பெருமை சுடர் விட்டுப் புகழ்ஒளி பரப்பிய காலம் எனினும், அறிஞர் அண்ணாவின் ஆர்வத்தாலும், ஆதரவினாலும் அந்த விழா பெருஞ்சிறப்புற்றது. ஆயினும் கவிஞர் அவர்கள் எதையும் பொறுமையாக எண்ணிப்பார்த்திடும் இயல்பினரன்மையினால் அந்த விழா நடத்தியவர்களைக் குறித்தே குறைகாண முற்பட்டார். அதனை ஒரிரு சமயங்களில் என்னிடத்தும் உரைக்கலானார். அதையுங்கூடப் பக்குவமாகக் கூறாது கடுமையான சொற்களையும் பயன்படுத்தி கூறிவிடுவார். அவரது இயல்பை அறிந்திருந்த நான் அதற்காக அவரைக் கண்டித்து ஏதும் பேசவில்லை. எனினும்: தங்களைப் பாராட்டிப் போற்றி நிதியளித்து வாழ்த்தியவர்களைக்