பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பாவேந்தர் நினைவு போற்றுவோம் பாவேந்தர்-புரட்சிக் கவிஞர்-இனமுரசுதன்மானவீரர்-பகுத்தறிவுச் சுடர். ஆனாலும் அவரது வாழ்க்கையில்-உலகியலில் அவரும் ஒரு மனிதரே! எனவே அவரால் தமிழுலகு பெற்ற பயனை எண்ணுவோர்.அவரைப் போற்றாமலிரார்! போற்றத் தவறார். தமிழகத்தில் இசையரங்குகளில் எல்லாம் மக்களுக்கு விளங்காத தெலுங்குக் கீர்த்தனங்களே, பக்கவாத்தியங்களோடு முழங்கப்பட்டு வந்த காலம். செட்டி நாட்டரசர் அண்ணாமலையார் அது கண்டு வேதனையுற்று தமிழிசை இயக்கம் தோற்றுவித்தார். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் தமிழிசை விழா கொண்டாடப்பட்டது. அவ்விழா நாட்களில் இசையரசுதண்டபாணி தேசிகர், ஏழிசைமன்னர் தியாகராஜபாகவதர், நாதசுர சக்கரவர்த்தி இராசரத்தினம் முதலான பலர் பங்கு பெறுவர். அந்த விழாக்களில் ஒரிருமுறை பாவேந்தர் அவர்களும் வந்து கலந்து கொள்வார். தமிழிசை நாடெங்கும் பரவவேண்டும். வேற்று மொழிப் பாட்டு 'சங்கீதமாவதை மாற்ற வேண்டும் என்னும் தணியாத வேட்கை அவருக்கிருந்தது. எனினும் நமது இசைவாணர்கள் பாடும் தமிழ்ப் பாட்டுகள் பெரிதும் புராணம் பரப்பும் பக்திப் பாடல்களாகவே அமைந்து, வைதிகம் வளர்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஒரு இசை விழாவில் தேசிகர் இசையரங்கு நிகழ்த்தினார். பல தமிழ்ப் பாடல்கள் பாடினாலும் இடையில் இரண்டு தெலுங்குக் கீர்த்தனங்கள் பாடினார். பாவேந்தர் தங்கி இருந்த இடத்தில் அவரைக் காண வந்த என் கல்லூரித் தோழர்கள், அந்தப் பாட்டரங்கு பற்றி அவரிடம் விவரித்தனர். தெலுங்குப் பாட்டு பாடினார் என்று கேட்டதும், ஒரு எள்ளல் நகை பிறந்தது அவரிடம், "நம்மவரின் பஞ்சப் புத்தி போகாது” என்று வெகுண்டார். ஏன்? என்றேன் நான். எவ்வளவு பெரிய இசைவாணர் ஆனாலும்-தெலுங்குக்கீர்த்தனம் பாடா விட்டால் தம்மை ஒரு சங்கீத வித்துவான் என்று மதித்து ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று பயப்படுகின்றனர்! தமிழ்ப்பாட்டுகளுக்கு என்ன பஞ்சமா? ஒரு முழுப்பாட்டரங்கும் தமிழ்ப் பாட்டுகளே பாடினால் என்ன குடி முழுகிப் போய்விடுமா? அக்ரகாரமும்-பத்திரிகைகளும் பாராட்டாவிட்டால்-பாட்டுத் திறமை போய் விடுமா? நம்மவர்கள் 'மான உணர்வு கொள்ள வேண்டாமா? தமிழால் சிறந்த இசையரங்கு நிகழ்த்த முடியாது என்கின்றனர்.நம் எதிரிகள். அந்தப் பழிச்சொல் உண்மையாவதற்கு