பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பாவேந்தருடன் அவற்றுள் புதுச்சேரிக்கு 20 மைல் தூரத்திலிருந்து வரும் மயிலம் முருகப் பெருமானும், 40 மைல்களுக்கு அப்பாலிருந்து வரும் செஞ்சி அரங்கநாத சாமியும் விழாவுக்கு அணி செய்யும் கடவுள்கள், ஒரு முறை மயிலம் சுப்பிரமணியர் துதி அமுது என்ற அற்புதமான பக்தி இலக்கியத்தைப் படைத்து மகவிழாவில் பாரதிதாசன் வெளி யிட்டார். அதில் வரும் திருப்புகழை அருணகிரியார் திருப் புகழ்ப்பாக்களுடன் இடையில் செருகிவிட்டால் இடைச்செருகல் என்று கண்டுபிடிக்க முடியாது. ஒருமுறை தேர்தல் நெருங்கும் நேரம் மகவிழா நடந்தது. மயிலம் முருகர் வீதி உலாவுக்குத் தெருவெங்கும் பந்தல் போட்டு அலங்கரிக்கப்படுவது வழக்கம். அவ்வாண்டு அலங்காரம் பாரதிதாசன் தமிழ்வாளின் வீர வீச்சுக்கள்தாம். அநியாய ஆட்சியை அழிக்க வா முருகா!' என்று தொடங்கிய அவர் பாடல்கள் எதிர்க்கட்சியின் ஆதரவை மக்கள் மனத்திலிருந்து அழித்த தோடல்லாமல் எதிர்க்கவும் வலிமை தந்தன. அந்தத் தேர்தலில் 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி படுதோல்வியடைந்து ஆட்சி பீடத்திலிருந்து இறக்கப்பட்டது. இன்று உள்ள வ.உ.சி. உயர்நிலைப் பள்ளிக்கு அப்போது மிசியோன் பள்ளி என்று பெயர். அந்த நாளில் புதுவை அரசியல் அமைப்பில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று இரண்டு வகை வாக்குச் சீட்டுகள் உண்டு. பிரெஞ்சுக்காரர்களும், தங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் என்று பதிவு செய்து கொண்ட இந்தியர்களும் முதல் வகுப்பு வாக்காளர்கள். பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதியில் பிறந்து 21 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் இரண்டாம் வகுப்பு வாக்காளர்கள். வாக்காளர் பட்டியலில் இரண்டுவகை இருந்த அநீதியை எதிர்த்துப் பாவேந்தர் குரல் கொடுத்தார். பாவேந்தர் சார்ந்திருந்த கட்சி செவ்வண்ண நாயக்கர் கட்சி. அப்போதெல்லாம் தனியார் பெயரில்தான் புதுவையில் கட்சிகள் இருப்பது வழக்கம். பிரெஞ்சு ஆட்சியில் அப்போது புதுவையில் இருந்த வாக்காளர் வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்ட அரசியல் தலைவர் திரு. செல்லான் நாயக்கர் ஆவார். அவர் மக்கள் செல்வாக்குப் பெற்ற வழக்கறிஞர். வாக்காளர் பட்டியலில் இருந்த இந்த அநீதிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து எழுத்துப்போர் புரிந்தவர் பாவேந்தர். பாவேந்தரின் இம்முயற்சி வெற்றிபெற்ற நேரம். அவர் பணிசெய்த பள்ளியில் ஆண்டுவிழா எடுக்கப்பட்டது. அவ்விழாவில் மாணவர்கள் ஒரு நாடகம் ஏற்பாடு செய்திருந்தனர். கதை, வசனம்,