பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 417 இன்னும் பலவித கனிகளுடனே என்ன வென்றே எடுத்துரைப்பேன் நான் இந்தக் கடைதனிலே இருக்கும் பொருள் வரிசை என்னவென்றே எடுத்துரைப்பேன். முக்கிய விருந்தினர் பெருந்தலைவர் காமராஜ் சிரித்துவிட்டு என்னைத் தட்டிக் கொடுக்கிறார். ஆம். அன்றைய முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டவர் காமராஜர் தான். அவரோடு பக்கத்தில் அமர்ந்து உண்ணும்பேறு என் தாத்தாவால் எனக்குக் கிடைத்தது. 米 மற்றொருமுறை. கவர்னர் மாளிகை. விருந்து... ஆம், எங்கே விருந்தென்றாலும் என்னையும் அழைத்துச் செல்லத் தவற மாட்டார் என்தாத்தா, பலவிதமான உணவு வகைகள் தட்டில் பரிமாறப்பட்டுள்ளன; பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறோம். என்னிடம் ஒர் ஆப்பிளை எடுத்துத் தருகிறார் தாத்தா. நான் அதைப் பத்திரமாகக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை மறுபடியும் போகும்போது அங்கேயே வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பயத்தோடு தின்னாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். தின்னு'தாத்தாவின் குரல். திரும்பவைத்து விட்டுத்தானே போகணும்? நான் தின்னலாமா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறேன். - அடே தின்னுமா-சிரிக்கின்றார் தாத்தா. இன்னும் எனக்குப் பயம் நீங்கவில்லை... பயத்தோடு பாதியைத் தின்றுவிட்டு, மீதியைத் தம்பிக்குப் பத்திரப்படுத்திக் கொள்கிறேன். கவர்னரிடம் அன்று எனக்கு அறிமுகம். 米 - 1964-ஏப்ரல் 21. ராஜா உயர்நிலைப்பள்ளி. தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.