பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 439 எனக்கு வேண்டும். வண்டியை விற்றுவிடு. குதிரையின் விலையைக் கொடுத்துவிட்டு நான் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குதிரையை மட்டும் வாங்கி இவர் என்ன செய்வார்? நான் பலமுறை சிந்தித்தேன். சரி பாவேந்தர் கேட்கிறார். நாம் எப்படி மறுத்துரைப்பது? என்று நினைத்தேன். அவர் சொன்னபடி முதலில் வண்டியை விற்றுவிட்டேன். குதிரையை மட்டும் வீட்டில் கட்டித்தீனி போட்டுக் கொண்டிருந்தேன். குதிரையை உங்களுக்குக் கொண்டு வரட்டுமா? என்று கேட்டேன். குதிரையா? எனக்கெதற்குக் குதிரை? என்று கூறிவிட்டார். 7. மீசை "பாவேந்தருக்கு வாழ்க்கையில் இரண்டே விருப்பம் தான் உண்டு. ஒன்று கவிதை; மற்றொன்று மீசை என்று ஒருமுறை குமரிமலர் ஆசிரியர் ஏ.கே.கே. செட்டியார் குறிப்பிட்டார். 8. காடைக் கனவு வாணியம்பாடியில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இராவண காவிய ஆசிரியர் புலவர் குழந்தையும் கலந்து கொண்டார். பாவேந்தர் முதல்நாளே வந்துவிட்டார். பாவேந்தர் புலால் விருப்பம் உடையவர் என்பதை அறிந்து விழாக் குழுவினர் ஐயா இப்பக்கம் காடை அதிகமாகக் கிடைக்கும். நாளை உங்களுக்குக் காடைக் கறி சமைத்துப் போடுகிறோம் என்று கூறினர். அடுத்த நாள் மதியம் உணவு பரிமாறப்பட்டிருந்தது. இலை முன் அமர்ந்த பாவேந்தர் இதில் எது காடைக்கறி? என்று கேட்டார். 'ஐயா! இன்று காடை கிடைக்கவில்லை. அதனால்...! என்று பயத்தோடு கூறினர் விழாக்குழுவினர். பாவேந்தர் கோபத்தோடு இலையைத் துர இழுத்துவிட்டார்; மீசை துடித்தது. இன்று கட்டாயம் கிடைக்கிறதா இல்லையா என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் என்னிடம் ஏன் சொன்னாய்! நான் அதையே நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்று சீறினார். அவரைச் சமாதானம் செய்து சாப்பிட வைப்பது பெரும்பாடாகிவிட்டது. 9. கண்ணால் பருகினார் 1956-ஆம் ஆண்டு குழித்தலையில் தமிழ் ஆட்சி மொழி மாநாடு' நடைபெற்றது. இளமுருகு-பொற்செல்வி இம்மாநாட்டை முன்னின்று நடத்தினர். குன்றக்குடி அடிகளார், பாவாணர், ஜீவானந்தம், இராசமாணிக்கனார், ப.நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாவேந்தர் மாநாட்டுத் தலைவர். முதலமைச்சர்