பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 79 நான் மேடையில் என் ஆத்திரம் தீரும் வரையில் பேசினேன். ‘என்னைக் கூண்டில் அடைக்க எவனும் பிறக்கவில்லை. மட்ட கரமான எண்ணங்களையெல்லாம் மாற்றிக்கொள். நீ படித்திருக்கும் அளவு உன்னிடத்தில் பண்பில்லை. உள்ளூர் என்ற தைரியமா? என்று பேசினேன். பிறகு ஒரு மணி நேரம் என் தலைப்பையொட்டிப் பேசினேன். மக்கள் அமைதியாகக் கேட்டனர். அதன்பிறகு என்.எஸ்.கே.யின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 23.4.62 பாவேந்தர் எப்போதும் உணர்ச்சிவயப்படக்கூடியவர். உணர்ச்சி வயப்படாதவன் கவிஞனாக இருக்க முடியாதே! இதனால் பாவேந்தரோடு பழகுபவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு அவரிடம் பழக வேண்டியிருந்தது. நன்றாகப் பழகிக் கொண்டிருப்பார். யாராவது நம்மைப் பற்றித் தவறான முறையில் கோள் சொன்னால் ஆராயாமல் அப்படியே நம்பிவிடுவார். அடுத்தமுறை அவரைப் பார்க்கச் சென்றால் போ வெளியே! பல்லை உடைச்சிடுவேன் என்று கூச்சலிடுவார். இது அவர் இயல்பு. எளிதில் யாரையும் நம்பும் அவரை யார் என்ன சொன்னாலும் செலவைப் பற்றிப் பொருட்படுத்தாமல் உடனே கையிலிருக்கும் காசைச் செலவு செய்யத் தொடங்கி விடுவார். யார் தடுத்தாலும் கேட்கமாட்டார். இது நமக்குத் தேவையா? தேவையில்லையா? என்பதைப் பற்றி சிந்திக்க மாட்டார். பாவேந்தர் தம்முடைய வீட்டில் எப்போதும் நல்ல இனத்தைச் சேர்ந்த கோழிகள், புறாக்கள் வளர்ப்பது வழக்கம். வீடு என்று இருந்தால் ஒரு பசுமாடு, கோழிகள், புறாக்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று கூறுவார். புதுச்சேரி வீட்டில்கூட 'காமலாபுரம்' குட்டைப்பசு ஒன்று எப்போதும் இருக்கும்; புறாக்கள் இருக்கும். சென்னை இராமன் தெரு வீட்டிலும் பாவேந்தர் கோழிகள் வளர்த்து வந்தார். ஒருநாள் பாவேந்தரைப் பார்ப்பதற்காக ஒரு விலங்கு மருத்துவர் (B.V.Sc.) வந்திருந்தார். அவர் கோழிகளைப் பார்த்துவிட்டு "கோழிகளையெல்லாம் இப்படி வளர்க்கக்கூடாது. அவைகளுக்கு நோய் வந்துவிடும். அவைகள் உட்காருவதற்கும், இரையுண்ணு வதற்கும் கோழிப் பண்ணைகளில் இரும்பில் செய்த சாமான்கள் இருக்கின்றன" என்று பேச்சுவாக்கில் சொன்னார். அடுத்த நாள் வெளியில் சென்ற பாவேந்தர் கோழிப் பண்ணையிலிருந்து அந்தப்