பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/25 மிட்டார். ஒத்திகையும் நடந்தது. அதில் பாரதி துஷ் யந்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். ஆளுல் நாடகம் நடக்கவில்லை. சகுந்தலை நாடக ஒத்திகை நடந்தபோது இந்தப் பெண் பிறந்ததால், இவளுக்கும் சகுந்தலை என்று பெயர் வைத்தார் பாரதி' என்ருர் பாவேந்தர். அதன் பிறகு கவிஞர்கள் வாணிதாசன், சுரதா, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மு.அண்ணுமலை ஆகியோரைப் பற்றிப் பேச்சுத் திரும்பியது. இந் நால்வரைப் பற்றியும் மிகவும் சுருக்கமாகச் சொல்லிச் சட்டென்று முடித்துக் கொண்டார். "வாணிதாசனுக்கு வயது நாற்பதிருக்கும். சொந்த ஊர் சேவியமேடு. நான் பிரெஞ்சு அரசாங்கப் புலவர் தேர்வுக் குழுத் தலைவன இருந்தப்போ, இவனும் தேர்வு எழுதி ஞன். நான் வேலையிலே இருந்த கல்வே கல்லூரியிலே இவனும் தமிழாசிரியன இருந்தான். நடுவிலே கல்லூரி யிலே கொஞ்சம் குறும்பு பண்ணிட்டா. அதனுலே சொந்த ஊரான சேவியமேட்டுக்கே மாத்திப்புட்டாங்க. முதலில சின்னச் சின்னதாக் கவிதை எழுதிக்கிட்டு வந்து காட்டுவான். நாந்தா திருத்திக் கொடுப்ப. நானே ஒரு சாற்றுக்கவி அவன் பாட்டுக்கு எழுதிப் பத்திரிகையிலே போட்டு விளம்பரப் படுத்தினேன். அவன் கவிதையில் புதிய கற்பனை ஒரு எழுச்சி இல்லை. என்னை அப்படியே பின்பற்றி எழுதுவான். நல்லாத்தா இருந்தா. கட்சி பிரிஞ்சப்போ இந்தக் கண்ணிர்த்துளிப் பசங்க கூட இவ னும் சேர்ந்துட்டா. அப்பறம் இந்தப்பக்கம் வராதடான் னுட்ட. இருந்தாலும் வருவா...கொஞ்சம் நன்றி உணர் வுள்ளவ. 'இன்ப இரவு'ன்னு நான் நாடகம் ஒன்னு நடத்திக்கிட்டு இருந்தப்ப அதிலே சுரதா தடிச்சுக்கிட்டு இருந்தான். என் பாடல்களைப் பேர்த்து எழுதுவான். பாண்டியன் பரிசை அவந்தா பேர்த்து எழுதினன். எழுத்து மணி மணியா இருக்கும். கொஞ்சம் துணிச்சலானவ.