பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/28 [T] 30–1–62 செவ்வாய் 口 இரவு மணி ஏழு இருக்கும். கவிஞர் இல்லம் சென்றேன். கட்டிலில் கவிஞர் படுத்திருந்தார். நான் நேராக அறைக் குள் சென்றேன். தலையைச் சாய்த்து என்னைப் பார்த்து வா’ என்ருர் . நான் நாற்காலியில் அமர்ந்தேன். கவிஞர் ஏதோ சிந்தனையில் இருந்தார். நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேசாமல் எழுந்து வந்து ஏன் இன்று கவிஞர் ஒரு மாதிரியாக இருக்கிருர்?' என்று பொன்னடி யிடம் கேட்டேன். 'யார் கண்டது? சித்தம் போக்கு! சிவன் போக்கு! நமக் கென்ன? நாம் போய் சாப்பிடலாம் வாங்க!' என்று கூறிச் சிரித்தார் பொன்னடி. பொன்னடியும் நானும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டோம். காலை 6 மணிக்கு நான் கண்விழித்து எழுந்தபோது கவிஞர் வீட்டில் இல்லை. நானும் சைதாப்பேட்டை புறப்பட்டேன். உந்துவண்டி ஏறுவதற்காக நான் தேளும்பேட்டை நாற்சந்திக்குச் சென்றபோது பாவேந்தர் அங்கு பாதையோரத்தில் நின்றுகொண்டிருந்தார். அந்தக் காட்சி என் உள்ளத்தை மிகவும் வருத்தியது. நான் அருகில் சென்று, 'ஏனய்யா இங்கு நின்றுகொண்டிருக்கிறீர்?" என்று கேட்டேன். "ஆமாம்! நிற்க முடியவில்லை. கால் கடுக்கிறது' என்று சொன்னர். உடனே அருகில் இருந்த பெட்டிக்கடையில் ஒரு பெட்டி வாங்கி அதன் மீது கவிஞரை உட்கார வைத் தேன். கவிஞர் ஒரு வெண் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு அதன் மீது உட்கார்ந்தார். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த கோவிந்தராசன் என்ற நண்பரைக்