பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 உருவாக்கி மறைந்தார். என்ருலும் உருவாக்கம் பெற்ற வங்கத்து நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அதைப்போன்று. கமது தமிழகத்திலும் ஒவ்வொருவரும் பாவேந்தரின் கவிதை நூல்களே வாங்கி தங்கள் வீட்டுப் பெண்களிடம்: கொடுத்துப் படிக்கச் சொல்லவேண்டும். 4 பாவேந்தர் கண்ட தமிழ் உணர்வு டாக்டர் எஸ். பாலச்சந்திரன் உரைச் சுருக்கம் தமிழ் நாட்டில் தமிழுக்கு அவமரியாதை ஏற்பட்ட போது பாவேந்தர் கொதித்தார்; வேதனை யடைந்தார், துன்பப்பட்டார். அதன் விளைவுதான் தமிழியக்கம்’ என்னும் நூல் உருவாகியது. பாவேந்தருக்கு தமிழ்தான் உயிர்; உலகில் உள்ள மற்ற இன்பங்கள் யாவும் அடுத்தபடிதான் இன்னும் சொல்லப் போனல், அண்ணன், தம்பி, அன்னே, தந்தை, என்-குயில் பேசும் மனேவி-அன்பைக் கொட்டுகின்ற குழங் தைகள் எல்லோரும் இரண்டாம் கிலேதான் அனைவரினும், முதலாவதாகத் தமிழ் திகழ்கிறது அவருக்கு. பாரதிதாசன் நாடெங்கும் இலவச நூற்கழகம் வேண் டும் என்று பாடினர்; தமிழக அரசு எல்லா ஊரிலும் இலவச நூற்கழகத்தை உருவாக்க வேண்டும். அவரது கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து -மற்ற மாநிலத்தவர்.மற்ற நாட்டவர் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். . o