92 பிடியும் களிறம்
வது போலக் கனவு காண்பேன். திடீரென்று கனவு குலேந்து விழித்தால், கண்டது கனவென்பது தெளிந்து, படாத பாடுபடுவேன். இனிமேல் நனவிலே நிகழும் புணர்ச்சி நிகழுமென்கிருய், அப்படியால்ை அந்தப் பழைய கனவிலே தோன்றும் புணர்ச்சியைப் போக்கி விடலாம்; அப்படித்தான் அல்லவா?
தோழி : ஆம்.
தலைவி நனவிற் புணர்ச்சி நடக்கலும், அப்போதே கனவிற்
புணர்ச்சியை வேண்டமாட்டோம்; அல்லவா?
புனவேங்கைத் தாதுஉறைக்கும் யொன் அறை முன்றில்
கனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்ருே?
நனவிற் புணர்ச்சி நடிக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்ருே?
(தினைப்புனத்தில்.வேங்கை மலரின் தாது கீழே உதிரும் :பொன்னிறம் பெற்ற பாறையாகிய முற்றத்தில், நனவிலே நடந்த புணர்ச்சி இங்கே நடக்கும் அல்லவா? அவ்வாறு நனவிலே நடக்கும் புணர்ச்சி இங்கே நிகழ்ந்த வுடன் அ போதே, இதுகாறும் நிகழ்ந்த கனவிலே காணும் புணர்ச்சியை விரும்பாமல் போக்கி விடுவோம் அல்லவா? -
இனிமேல் எப்போதும் இல்லத்தில் தலைவனுடன் இருந்து வாழலாமென்றும், முன்போல் அவனைக் காணுமல்
கனவிலே கண்டு கலங்குவதற்கு அவசியம் இல்லையென்றும் சொன்னுள்.
புனம்-தினைக்கொல்லை. உறைக்கும்-திரும். அறைபாறை. முன்றில்-முற்றம், முன்னிடம். நனவில்புணர்ச்சிதனவிலே உண்மையாக நிகழும் புணர்ச்சி நடக்குமரம்