பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முயற்சி 97

யைச் சார்ந்தோர் உடம்பாட்டுக் குறிப்புடன் இருப் பதையும் அவன் உணர்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந் தான். உடனே தன் ஊர் சென்று மீட்டும் மணம் பேசும் பொருட்டுப் பெரியோர்களை அனுப்பினன். தல்ைவியைச் சார்ந்தோர் உடம்படவே, அவனே தக்க பெரியோர்களையும் சோதிடனையும் அழைத்துக்கொண்டு பரிசப் பொருளுடன் மணம் புரிய ஏற்ற நிலையில் வந் தான். அவன் வரவே மணத்துக்குரிய முயற்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அதைத் தோழி தலைவிக்குப் புலப்படுத்தினுள்.

தோழி : தலைவர் மணம் செய்வதற்குரிய நிலையில் வந் தார். மிக உயர்ந்த மலைக்குத் தலைவராகிய அவர் வருகையில் தம்முடன் சில அறிஞர்களை அழைத்து வந்திருக்கிரு.ர்.

தலைவி : யார் யாரை அழைத்து வந்திருக்கிருர்?

தோழி : அவருடன் ஒரு சோதிடன் வந்திருக்கிருன். அந்தக் கணி மூன்று காலத்தையும் அளந்தறியும் அறிவளும், நல்ல நூல்களே ஆராய்ந்து அவற்றின் நெறியை அறிந்தவன். அவன் மணமக்கள். ஒன்றுபட்டுச் செறிவதற்கு ஏற்ற முகூர்த்தத்தை வைத்தால் அந்த முகூர்த்தம் நன்மை தருவதில் தவருது. அந்தக் குறியாகிய நல்ல நேரம் மாறுதலை அடையாது. இது காறும் தான் வைத்த முகூர்த்தங்கள் திரிபு அறியாத அறிவன் அவன். அவனே முன்னிட்டுக்கொண்டு தலைவர் வந்திருக்கிரு.ர். -

தலைவி : அந்த அறிவன் ஒருவன்தான வந்திருக்கிருன்?

சில அறிஞர்கள் வந்ததாகச் சொன்னயே!

தோழி : ஆம். அறிவைேடு சான்ருேர் சிலரைத் தமக்குச் சுற்றமாக அழைத்து வந்திருக்கிரு.ர். அந்தச் சான் றவர் தகுதி மிக்கவர்கள். எதையேனும் எடுத்துச்

பிடி -7