பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் - . 103 அவர்களது ஏழாவது குழந்தையின் பிரசவம் நடந்ததாம், அதிலிருந்து அம்முற்ை வெற்றிகரமாகச் செயற்படத் தொடங்கியது வலி தோன்றியதும் மகாராணிக்கு "க்ளோரோபாரம்' -மயக்க மருந்து (Chloroform) கொடுக்கப்பட்டு, பிரசவம் கவனிக்கப்பட்டதாம். இடுப்புவவி தோன்றியவுடனேயே கர்ப்பிணியை ஆஸ்ப்த்திரியில் சேர்த்துவிட வ்ேண்டும். பிரசவ காலத்தில் கர்ப்பிணியின் உடலில் அடிக்கடி மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும், ஆகவே, மருத்துவர்கள் கணிக்கும் பிரசவ நேரத்துக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ பிரசவம் ஆவதும் இயற்கையல்லவா? பிரசவ காலத்தில் வயிற்றைச் சுத்திசெய்ய எனிமா (enema) கொடுப்பார்கள். பிரசவ நேரத்திற்கு முன்பாக, ஸ்மரணையற்றிருக்க ஊசியின் மூலமாக மார்ஃபியா, "ஹையோசீன் மருந்துகள் செலுத்துவார்கள். இம்மயக்க நிலைக்கு சாயுங்கால உறக்கம் எனப் பெயர். ஆனால் இம்மாதிரியான இடைநிலைப் பிரயோகங் களை ஏற்காமல் இருப்பதே தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும். - பிரசவ அறையில் தாயும் அதற்கு வெளியே தத்தையும் ஜீவமரணப் போராட்டம் நடத்துகிற ஒரு விளையாட்டு பிரசவம் என்கிற நிகழ்வு. உள்ளேயும் வெளியேயும் தெய்வ நம்பிக்கைதான் விளையாடிக் கொண்டிருக்கும். விதை விதைத்தவன் விட்டபடி என்று இருப்பது விவேக மில்லாத செயல்! - ....-نه : " س பிரசவ வலியின் துன்பம் தொடர்ந்து, பனிக்குடம் உடைந்து, அதன் பின் நான்கு மணி நேரம் க்ழித்தும் பிரசவம் ஆகவில்லையென்றால், வீட்டில் பிரசவம் வைத் திருப்பவர்கள், உடனடியாக மருத்துவமனை டாக்டரம் மாக்களை அழைத்து வந்து விடவேண்டும். இது முக்கியம். பனிக்குடம் உடைந்து, இடுப்புவலி உச்சத்தை அடைந்து விட்டாலே அது, குழந்தை வெளியே வரத் தயார் என்பதற்குப் பொருள். அதற்குத் தாமதம் என்றால், கருப்பைக்குள் திடீரென்று ஏற்பட்டுவிட்ட தொல்லைகள் தாம் காரணமாக அமைகின்றன. ஆகவே இம்மாதிரியான பிரசவக் குறிகளைக் கவனிக்கவேண்டும். ஆஸ்பத்திரி என்றால், எல்லாவற்றையும் தக்கபடி கவனித்துக் கொள்ள தாதியர் இருப்பார்கள். - -