பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 9 வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில் போலவர் - போவது கண்டு மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல சந்திகழ் கொங்கை மதன சுகந்த விதனம் இதென்று வாலிப கோலமும் . வேறு பிரிந்து இவ்வாறு சுவை சொட்டச் சொட்டப் பாடிக் கொண்டே போகிறார் பட்டினத்தார். இயற்கையின் இயல்பான-தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண், பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு திரு மனம்’ என்கிற சடங்கும் முதல் இரவு என்கிற விழாவும் இன்றி யமையாத பாதுகாப்பாக-இனிமை கொண்ட எச்சரிக்கை யாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஒர் அற்புதமாகத் திகழ்கிறாள் தாய்' என்னும் மகாசக்தி, அந்த மகாசக்தி பெற்றெடுக்கும். மகத்தான அற்புதமாகவே குழந்தை' எனும் புதுமை’ பொலிகிறது! - - - 'குழந்தை என்று சொல்லக்கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உலகம் என்ற ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும்.’’ எ ன் று மொழிந்த ஆசியஜோதியான நே ரு ஜி யி ன் சொற்களை நாம் எப்போதுமே மறந்துவிட முடியாது. இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்!” என்று இளைய பாரதத்தினோர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிக்கும் உடைத் தானது குழந்தை உலகம். - இந்த இருபதாம் நூற்றாண்டை குழந்தைகளின் நூற்றாண்டு எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் Go (Ellen Key) souñads. . .