பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் I3 தன்னிலிருந்து மகத்தான சக்தியை வெளியேற்றி-இழந்துஇன்பத்தைப் பெறுகிறான். ஆன்ால் பெண் மேற்குறித்த, இன்பத்தைப் பெற எதையும் தன்னிலிருந்து இழப்ப தில்லை. உள்ளத்து உணர்வுகளிள் ஆட்சியின் காரண மாகக் கிளர்ந்தெழும் ஆசைப் புரட்சியை-மோகப் போராட்டத்தை, தன்னுள் எழுந்து துடிக்கும் ஓர் உணர் வுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அவள் சிருஷ்டியால் இயற்கையாகவே அமைக்கப்பட்டி, ருக்கிறாள். ஆகவேதான், அவளுள் எந்த இழப்பும் ஏற். படுவதில்லை. உடற் கலவியின்போது, ஆணிடமிருந்து வெளியாகும் விந்துபோல பெண்ணிடமிருந்து விந்து வெளியாவதில்லை. ஆகவேதான், இ ந் த உயிர்ச்சக்தியை-உயிர்ப்புச் சத்தைக் கட்டிக் காப்பற்றிப் போற்றிப் பேணுவதில் ஆண்மகன் மிகுந்த பக்தி சிரத்தை கொள்ளவேண்டும் என்று அறிவாளர்கள் கூறியிருக்கின்றார்கள், மோகவெறி, காமப்பித்து. மிருக உணர்ச்சி போன்ற கீழ்த்தரமான நோக்கங்களுக்கு அடிமையாகி, மனிதன் தன் ஜீவசத்தை விரயம் செய்வது மகாபாவம் என்றும், அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தற்கொலை முயற்சிக்குச் சமம் என்றும், அது ஒரு சமுதாயத் துரோகம் என்றும் தம்முடைய சத்திய சோதனை'யில் பலப்பல. தருணங்களில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கா ந் தி அடிகள். கேவலம் உடல் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் நோக்கம் மட்டும் தாம்பத்திய உறவுக்கு இருந்தால் அதை. விட அதர்மமான செயல் உலகில் வேறொன்றுமே இருக்க, முடியாது. - . - . .