பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பிரசவ கால ஆலோசனைகள் இன்னுமொரு வழியும் கூறப்படுகிறது. கடைசித். 'தாரம் ஆன முதல் நாளிலிருந்து மூன்று மாதங்களைப் பின் தள்ளி எண்ணி, அத்துடன் ஒரு வருஷம். ஏழு நாள் களைக் கூட்டினால், அந்த நாளையே பேறுகால நாளாகக் கொள்ள வேண்டும். இத்தகைய முறை மேலை நாடுகளி லும் அனுஷ்டிக்கப்படுகிறது. இப்போது கூறிவந்த வகைகள் எல்லாம் ஒர் அனுமானக் கணக்குத்தான். 'மழைப் பேற்றையும் பிள்ளைப் பே ற் றை யு ம் மகேசனால் கூடச் சொல்ல முடியாது!’ என்பது நம் நாட்டுப் பழமொழி!... . - குழந்தைப் பேறு எய்தும் நல்லதிருஷ்டம் பெற்ற பெண், கருவுற்று அக்கரு தாயின் கருப்பப்பையில் வாசம் செய்யத் தொடங்கும் நாள் முதல் அப்பிண்ட்ம் வளர்ந்து வாழ்ந்து இம்மண்ணுலகின் கண், கண்மலரும் வரையுள்ள இந்த இடைவேளைப் பகுதியின் நாள்களிலே தாய் அனுபவிக்கும் இன்பத் தொல்லைகளுக்கும் அடையும் உடல் உபாதைகளுக்கும் மனப் பயங்களுக்கும் தாண்டி வரும் கண்டங்களுக்கும் ஒர் எல்லையே இல்லை. ஆகவே, இந்தக் கர்ப்பக் காலத்திலே அப் பெண் கவனித்து மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. பிரசவித்துப் பழக்கப்பட்ட நல்ல மனமுள்ள-பெண்கள் சொல்லும் ஆலோசனைகள் எச்சரிக்கைள் - புத்திமதிகள் - ஆறுதல்கள் - ஆகியவை யும் கர்ப்பவதிகட்குப் பெரிதும் துணை நிற்க முடியும். “கர்ப்பகாலத்தில் கடைசிக் கட்டமாக குழந்தையைப் பிரசவிக்கும் கடமை கருதப்படுகிறது' என்று நியூயார்க் l-irġLř zgsivi siv Geg aĝÉGLIGg.sv Justus J Schifferes.