பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 29 ஊற்றிக் கலந்து, அதைக் கர்ப்பவதியின் இடது மூக்கில் ஊற்றினால், ஆண் ஜனனம் என்றும் வைத்திய சாஸ்திரம் கூறுவதாக நம்பப்படுகிறது. . - - நல்லநாள் கணித்து சுபமுகூர்த்தம் கண்டு முதலிரவு' என்றும் சாந்தி முகூர்த்தம் என்றும் பலதானம்” என்றும் புதுமணத் தம்பதி உடலுறவு(Sexua intercourse) கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துவதும், மேற்சொன்ன பரம்பரை வழிபட்ட நம்பிக்கையின் அடிப்படையில்தான் என்பதை நாம் நம்புவதற்கு நம்முடைய பகுத்தறிவு தாராளமாகவே இடமளிக்கச் செய்யும். - ஆண்-பெண் உறவின் அடிப்படையில் இருக்கும் இனவிருத்தி-சிருஷ்டி-சமுதாயச்சேவை போன்ற குறிப்பு. களையும் அத்தம்பதி உணரவேண்டும். உடலுறவின் போது, ஆனும் பெண்ணும் வெளிப்படுத்த நேரிடும் ஜீவதாதுவின் மகத்துவத்தையும் அவர்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், அவர்கள் தங்க. ளுடைய உடலுறவுக் கேளிக்கைகளை அளவுடன்’ வைத்துக் கொள்ள முடியும். அளவு கடந்த உடற் சேர்க் கைகளின் விளைவாகவும், புத்திர உற்பத்தி உண்டா காமல் தடைப்பட ஏதுவுண்டு என்பதையும் அவர்கள் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். - x ஆகவே, தாம்பத்திய உறவுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். திருமணமான தம்பதியரிடையேயும் நிலவிப் பண்பட்டு வரவேண்டிய பிரமச்சரியம் பற்றி அடிக்கடி அறிவுறுத்திய காந்தியடிகளின் உள் நோக்கம் இத்தகைய தற்காப்புகளுக்காகவே தான் பெரும்பாலும் ஏற்பட். டிருக்க வேண்டும். புலனடக்கம், மனக்கட்டுப்பாடு முதலிய பராமரிப்புகளின் வாயிலாக இளமை"யின் தற்காப்பு பேணப்படவேண்டும். -