பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிரசவ கால ஆலோ சனைகள். குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற ஆவலின் துடிப்பும் குழந்தைப் பாசமும் குழந்தை மீதுள்ள ஆர்வமும் ஒரு பெண்ணுக்கு அடி நாளிலிருந்தே உள் மனத்தில் படிந்து, அதன் மூலமாக அந்த ஆர்வம் மிகுந்து அவ்வார்வமே அவளது உடலிலும் அவளுடைய ஆன்மா விலும் படிப்படியாகப் பரவி நிறகவேண்டும். இத்தகைய நிலைக்கு இலக்காகும் பெண்கள் சீக்கிரமே கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக மனோதத்துவ ரீதியில் நம்பப்படு &pg. (Ideal Birth) - ஒரு பெண் மாதவிலக்கு ஆனதும் அந்த மூன்று நாள் களும் அவள் ஒதுங்கித் துார இருந்து பின் நான்காம் நாள் நீராடி வீட்டினுள் செல்கிறாள். இடைப்பட்ட மூன்று நாள்களிலும் அவளது கருப்பையில் உள்ள கெட்ட நீர் போன்றவை வெளிப்படுகின்றன. நான்காம் நாள் கருப்பத்தில் பிளளைப்பேற்றுக்குரிய ஜீவ அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அன்று தொட்டு பன்னிரண்டு நாள்கள் கணவன், மனைவியைப் பிரியர்திருத்தல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 'பூப்பு உண்டாகும் நாளுக்கு ಅpರ್ಿ ஆறு நாள்களும் பிறகு ஆறு நாள்களும்,தாம்பத்தியப் புணர்ச்சிக்கு உகந்த காலமாகக் கருதப்படுகிறது. களவியல் உரையாளரான நக்கீரர், மாதவிலக்குப் பெற்ற மூன்று தினங்களும் சொல்லாடல் மூலம் உடனிருந்து, பின் ஒன்பது நாளும் இணைதல் வேண்டும் என்றும் மூன்று நாளில் சொல்லாடல் மூலம் இன்பம் கொள்ள வாய்ப்பில்லாவிடில், பெண்ணிடம் ஒரு நலிவு ஏற்பட்டு, அதன் விளைவாக கருச்சிதைவு ஏற்படக்கூடு மென்றும் கூறியுள்ளார். புத் என்ற நரகத்தினின்றும் விடுபட உதவும் புண்ணியம் குழந்தைக்குக் கிடைக்கிறது. இம்மைப்பயன்