பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பேறுகாலப் பராமரிப்புகள் புதிய விருந்தாளியை-அந்தப் புத்தம் புதிய இனிய ஆத்மாவை வரவேற்பதற்கான ஆயத்தங்களைத் தனக்குத் தானே செய்யக் கடமைப் பட்டவளாக ஆகிறாள் தாய். தான் கருவுற்றிருக்கும் உண்மை நிலை நிர்ணயமானதும், அவள் அக்குடும்பத்தில் பெறும் தனி அந்தஸ்து துல்லிய மானதாகும். கொண்ட கணவன் மெய்யாகவே அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவான்; பெற்ற தாய் தந்தையும் அம்மகளைத் தனிப்பட்ட கவனிப்புடன் பேணுவதற்கு முனைவார்கள். வேண்டாத மாமியாரும் கூட, தன் மருமகள் சூலுற்றிருப்பதை அறியும்போது, 'நல்ல மாமியாராக உருமாறி விடுவதை நாம் பார்க் கிறோம். - - இத்தகைய செல்வாக்குகளைச் சுவீகரித்துக் கொள்ள ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்கிறது. இத்தாய்மை எனும் பேறு. . . கர்ப்பவதி எனும் புதிய பட்டத்தை அப்பகுதி மருத்துவ அம்மணிகள் அவளுக்குச் சூட்டியதும்,அப்பெண் தன்னுடைய உடல்-உள்ளப் பராமரிப்பில் தக்க கருத்து கொள்ள வேண்டும். டாக்டர்கள் சொல்லும் அளவில் அவர்கள் குறிப்பிடும் மருந்துகளையும் உணவு வகைகளை யும் உரிய காலத்தே உட்கொள்ள வேண்டும். கர்ப்பவதிகளுக்கு உணவுதான் மிகவும் இன்றியமை யாததாகும். எதிர்காலத் தாய்' என்றழைக்கப்படும்