பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பத் து மாத அதிசயங்கள்! இனவிருத்தி என்பது உலகப் பொது தர்மமாகவே அமைந்து விட்டது. . . . . . . . ‘. . . . ஆனால், இன்றுள்ள நிலையில் ஜனப்பெருக்கம் காரணமாக, கருத்தடை என்றும், குடும்பக் கட்டுப்பாடு என்றும் காரசாரமாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்காக உலகின் எல்லாப் பகுதிகளிலும் கருத்தடை வளையங்கள் என்றும் கருத்தடை மாத்திரைகள் என்றும் அந்தந்தப் பகுதிகளின் ஆட்சிகளே வழங்கியும் வருகின்றன. இம் மாதிரிப் பயங்கரங்கள் பிள்ளைகுட்டிகள் மலிந்த பெற் றோர்களுக்காக ஏற்பட்டவை. - . . ஆனால் அளவான முறையில் குழந்தைகள் பெற்ற பெற்றோர்கள், தாங்களே இந்தப் பலனின் நல்ல விளைவு களை அனுபவபூர்வமாக உணரக்கூடும். இதற்கெனவே. 'திட்டமிட்ட குடும்பமே திகட்டாத இன்பம்' என்றும், "ஆசைக்கொரு பெண்ணும் ஆஸ்தித்கொரு ஆணுமே குடும்பத்தின் ஜீவவிளக்குகள். இவையே குடும்ப ஒளிக்குப் போதும்' என்றும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க் கின்றன. உண்மைதான்! ஆம்; உண்மையேதான். ஒரு குடும்பத்தின் பரம்பரை ஒளியை நின்று நிலைத்துக் கட்டிக்காக்கும் புண்ணியக் 4 اساس L5