பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 57 இருக்கும்; அதன் பலனாக வாந்தி, குமட்டல், வயிற்றுப் புரட்டல் போன்றவையும் விடாமல் ஏற்படும். கர்ப்ப ஸ்திரீகள் எல்லாருக்குமே மசக்கை வருமென்ற நியதி இல்லை என்பது டாக்டர் மேரி ஸ்டோப்ளி'ன் கூற்று. பச்சைக்காய் வகைகள், பழரசம், கனிவகைகளை உட்கொண்டால், மசக்கையைச் சரளமாகக் குறைக்க, வழி பிறக்கும். அமோனியா உப்பை நுகரலாம். எலு: மிச்சையை நுகரலாம். சிலர் தலைமயிரைக் கொய்து நுகர்வதும் சகஜம். இந்த மசக்கையைப் பற்றி வெகுவாக எண்ணிக் கஷ்டப்படலாகாது. கூடியவரை இந்த வியாதியை மனத் திலிருந்து மறந்துவிடப் பழகவேண்டும். கர்ப்ப காலத்தே மனம்தான் முதலில் அதிகக் கவனத்துடன் காக்கப்பட வேண்டும்! காற்றோட்டம் உள்ள இடங்களில் ஒய்வும், உறக்கமும் கொள்ளுதல் அவசியம். சோம்பித் திரியாமல், உடல் பலவீனத்தைச் சரிக்கட்டும் வகையில், சில்லறைக் குடும்ப அலுவல்களைப் பார்த்தும் நூல்களைப் படித்தும், இந்நோயைப் போக்கிக் கொள்ள முயல்வதும் சாத்தியமே! இப்பொழுது இரண்டாவது தடவையாக வீட்டுக்கு விலக்கு ஆவது நின்றுவிடுவதாலும், வாய் குமட்டல் முதலியன காலையில் உண்டாகும் வியாதிகளாலும் (Morning sickness), ஸ்தனங்களில் சற்றே ஒருவிதமான உணர்ச்சி உண்டாவதாலும் கர்ப்பும் உண்டாகியிருப்பது உறுதியாகிவிடுகிறது. எவ்வகையிலும் மலச்சிக்கல் ஏற்பட்டுவிட இடம் கொடுத்துவிடலாகாது. பழங்கள் மிகவும் பயன்தரும். சாப்பாடு செல்லாது. என்றாலும் அதற்கு ஈடாகவே