பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பிரசவ கால ஆலோசனைகள் கூறப்படுகிறது. நரம்புச்சக்தி கருப்பைக்கும் அதனுள்ளிருக் கும் கருவின் வளர்ச்சிக்கும் செலவிடப்படுவதால், உடற். சக்தி பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. மலம் வெளிப்படுத்தப்படுவதற்குத் தேவைப்படும் உந்துதல் உணர்ச்சி தடைப்படுவதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். அடிக்கடி பச்சைத் தண்ணிரோ அல்லது கடு தண்ணிரோ பருகலாம். எதற்கும் பலன் கிட்டாவிடில் மருத்துவமனைகளை நாடுவதுதான் சாமர்த்தியமாகும். கர்ப்பவதிகள் தங்கள் கணவன்மார்களுக்கு வைக்கும் பரீட்சை போல இப்போது அவர்கள் என்னென்ன பொருள்களையெல்லாமோ விரும்புவார்கள்; அவற்றைஉண்ணத்தக்கதாக இருந்தால்-தட்டாமல் வாங்கிக் கொடுக்கத்தான் வேண்டும். அம்மாதிரிப் போக்கு இம் மாதத்தில்தான் முனைப்பாகும். . கர்ப்பவதிகள் உணர்ச்சி வசப்படலாகாது. மூன்றாம் மாதத்தில் தலை காணப்படும். விரல்கள் தெரியும். உடல் உருவாகியிருக்கும். சிசுப்பிண்டமாக (embryo) அது தோன்றியிருக்கும். நஞ்சும், தொப்புள் கொடி-நஞ்சுக் கொடியும் தென்படும். இப்போது கரு ஒர் ஆரஞ்சுப் பழத்தின் அளவுடன் காணப்படும். மூன்று அங்குல நீளமும் இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் எடையும் இருக்கும். கரு, மார்பகங்கள் விரிவடைந்து, முலைக் காம்புகளில் புள்ளிவளையங்கள் சுற்றித் தோன்றிக் கறுக்கும், வயிறு இன்னும் பார்வைக்குத் தட்டுப்படாது. பனிநீர் நிரம்பிய பையில் குழவி மிதக்கிறது. கருவிற்கு எவ்வகையான அதிர்ச்சியும் உண்டாகாமல் பாதுகாத்து, பிரசவ காலத்தில் சுகப் பிரசவமாவதற்கு. இது வழிவகுத்துக் கொடுக்கவும் எத்தனிக்கின்றது.