பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் ژه فن குழந்தையின் நாபியிலிருந்து கர்ப்பப்பையின் சுவருக்குத் தொப்புள் கொடி பிணைக்கப்பட்டிருக்கிறது. கருப்பையின் உட்சுவரில்தான் நஞ்சுக் கொடியும் உண்டாகியுள்ளது. மூன்றாம் மாதத்தில் இது நன்றாகக் காணப்படும். தாயின் ரத்தத்தினால் குழந்தையைப் போஷிக்கவும் கழிவுப் பொருள்களை வெளியேற்றவும் வல்ல ரத்த நாளங்கள் இக்கொடி வழியே ஒடுகின்றன. முன்பே கூறப்பட்ட செய்திகளை மீண்டும் எண்ணிப் பார்க்கச் செய்யும் சக்தி இம்மூன்றாம் மாதத்திற்கு உரியது. - + . நான்காம் மாதம் தூரத்தில் இல்லை. 4. நான்காம் மாதம் நான்காம் மாதத்தில் கர்ப்பத்தின் சிசு ஐந்து முதல் ஆறு அங்குல நீளம் இருக்கும். நான்கு அவுன்ஸ் எடை இருக்கும். • ஆண், பெண் குறிகள் காணப்படும். இச்சமயத்தில் அடிவயிறு (abdomen) பெருத்துவருவது. கண்ணுக்குப் புலப்படும். சிசுவின் தலை ஏனைய அவயவங்களைவிடப் பெரி தாக இருக்கும். மூளையும் பிற உறுப்புகளும் உண்டாகி விட்டன. குழந்தையின் இருதயம் துடித்துக் கொண் டிருக்கும். ஆனால் இத்துடிப்பை நாடிக்குழல்கூட உணர வாய்க்காது. இப்போதுகூட சிலருக்குக் காலை மயக்கம் இருப்பது உண்டு. சரியான ஆகார வகைகளை உண்டு வந்தால் அது இம்மாதத்துடன் நின்றுவிடும். இப்பொழுது நன்கு கறுத்த முலைக்காம்புகளைச் சுற்றிலும் சிறு வெண் புள்ளிகள் தோன்றும். குழந்தைக்குப் பாலூட்டுவதற்னெக.