பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பிரசவ கால ஆலோசனைகள் х ஸ்தனங்கள் பக்குவமடைகின்றன. முலைக்காம்புகளுக்கு கோல்டு க்ரீம் (Cold Cream) தடவி மிருதுவாக வைத்துக் கொள்ள வேண்டும். மர்மக்குறியும் முலைக்காம்புகளும் சுத்தமாக இருக்கவேண்டும். வயிறு பெருக்கத் தொடங்கும் நிலையில், புடைவை களை வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகவே, இவ்விஷயத்தில் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். தொடக்கத்தில் கூறப்பட்ட சத்துமிக்க ஆக்ாரவகை களை அளவுடன் உண்டு வந்தால்தான் பிரசவத் தருணத் தில் நல்ல பலன் யாதொரு சிரமமும் இன்றிக் கிட்ட முடியும். ரத்தக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது ரத்தம் கெட்டுவிட்டாலோ, இந்நிலையில் ஏதாவது விபத்து சம்பவித்தாலோ, கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நல்ல உழைப்பும் உலாவுதலும் ஒய்வும் உறக்கமும் வழக்கம்போலத் தொடரவேண்டும். காற்றோட்டமிக்க இடங்களிலோ பூங்காக்களிலோ காலையிலும் மாலை யிலும் உலாவுதல் நல்ல உடற்பயிற்சிக்குச் சமம். அளவுடன் உடற்பயிற்சியைக் கடைபிடிப்பது நல்லது. பிரசவ சமயத்தில் வெகு இலகுவாகப் பிரசவமாகிவிடும். ஆனால் அவ்வளவு அக்கறை யாருக்கு இப்போது இருக் கிறது?- என்றாலும், உலாவும் வழக்கம் நல்லதோர் உடற்பயிற்சி தானே! இதனால் ரத்த சுத்தியும் ரத்த ஒட்டமும் செம்மைப்படும். தூயகாற்று கர்ப்பிணிகளுக்கு அருமருந்து - கால்பாதங்களின் வலி தொடரும், விளக்கெண்ணெய் தடவி வெந்நீர் ஒற்றடம் கொடுக்கலாம். - இரவில் நல்ல பசும் பாலில் குங்குமப்பூ கலந்து உட்கொண்டால், குழந்தை நல்ல நிறத்துடன் பிறக்கும். என்பது விஞ்ஞான உண்மை! - - -