பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 65 5. ஐந்தாம் மாதம்: ஆஹா! நாள்கள் எவ்வளவு விரைவுடன் கனவுப் பாய்ச்சலில் பறக்கின்றன! கர்ப்பிணிகளைப் பொறுத்த அளவில் இந்த ஐந்தாம் மாதம் ஒரு குறிப்பிடத்தக்க மாதமாகும். இப்போது முதல் அலுவலாக தகுந்த தேர்ந்த லேடி டாக்டரிடம் தன் மனையாட்டியைக் காண்பித்துச் சோதித்து தகுந்த மருந்துகளைச் சாப்பிடச் செய்ய வேண்டியது பொறுப்புள்ள கணவனின் கடமையாகும். மருந்துகளின் ஊட்டம் இப்போது சிசுவின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்டால் குழந்தை பெரிதாகிவிடுமென்று தவறாகக் கருதப்படுவதும் உண்டு. இது சரியில்லை. எதுவும் அளவுடன் இருந்தால், எந்தக் கெடுதியும் ஏற்பட முடியாது. சிசுவின் இருதயத்துடிப்பை டாக்டர் தன் நாடிக் குழல் மூலம் உணர வாய்க்கும் மாதம் இதுவே! துணைவி கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்றவுடனே கணவன் மிக்க மகிழ்ச்சி கொண்டு, அவள் பிரசவிக்கும் பரியந்தம் அவ்விடுதலை நாளையே தனது இலக்காகக் கொண்டு மனைவியைச் சம்ரட்சிப்பதில் கருத்துக் கொள் கிறான். - . . . . . . - நான்காம் மாதத்தில் இருந்ததைவிட மனைவியின் நிலையில் ஒரு தெளிவு காணப்படும். ஆகவே இப்போது அவர்களிடையே தாம்பத்ய உறவு நிகழுவது இயல்பு. அதுவும் மாதத்திற்கு மூன்று, நான்கு தடவையுடன் நின்று விடவேண்டும். நான்கு, ஐந்து, ஆறு ஏழு மாதங்களுடன் பி-5 -