பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. ஆறுமுகம் 67 இராச்சாப்பாட்டை படுக்கைக்குச் செல்லுவதற்கு இரண்டு மணிக்கு-ஐந்து நாழிகைக்கு-முன்பாகவே முடித்துக் கொள்ளவேண்டும். மாலை ஆறு மணிக்குப் பிறகு காப்பி, தேயிலை வகைப் பானங்களைப் பருகக் கூடாது. நீரடைப்பு, மலச்சிக்கல் உண்டாகவே கூடாது. பிரசவம் ஆகும்வரை பார்லித்தண்ணிரை தொடர்ந்து அடிக்கடி உபயோகிக்க வேண்டும். - இப்போது கருப்பையை கையால் தொட்டுப்பார்க்க இயலும், கருப்பை சுருங்குவதும் த்ெரியும். தாயின் இருதயத்துக்கும் குழந்தையின் இருதயத்துக் கும் உள்ள விந்தைப் பிணைப்பு காரணமாகத்தான் தாயைப் பாதிக்கும்-அல்லது தாயினுள்ளே ஏற்படும் எல்லாவகைச் சலனமும் குழந்தையையும் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது. சிசுவின் சலனம் ஒர் உண்மையைச் சொல்கிறது; ஆன்மா. சரீரத்தைத் தனக்கு ஐக்கியப்படுத்திக் கொண்டு அதன்மீது தன் ஆணையைச் செலுத்த இது முதலாக ஆரம்பிக்கிறது, முன்னர் உடலை நிர்மாணிக்கும் அலுவலை மேற்பார்வையிட்டு வந்து, இப்போது அதனுள் குடிபுகுந்து விட்டதாக கருவின் சலனத்தைக் கொண்டு அறிவிக்கின்றது. இந்நிகழ்வு கருத்தரித்த பதினெட்டாவது வாரத்திலிருந்து இருபதாவது வாரத்திற்குள் உண்டா கிறது. - - - - ... சிசுவைத் தரிசிக்கத் துடிக்கும் நேரம் ஆயிற்றே இது: