பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 69 சோம்பல் படாமல் வீட்டு அலுவல்களைச் செய்ய - வேண்டும். ரத்த ஒட்டத்திற்கான வழியில் உலாவுதல் நல்லது. ஒய்வும் உறக்கமும் தொடரட்டும். - இச்சமய்த்திலே சிலருக்கு உதிரம் வெளிப்படும். எச்ச ரிக்கையுடன் இருக்க வேண்டும். இனி மலச்சிக்கல் சகஜமாக ஏற்படக்கூடும். அதைப் போக்க, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆம்; இனி மூன்றே மாதங்கள்தான் மிச்சம்! 7. ஏழாம் மாதம் காலத்தின் சுழற்சியில் நாட்கள் தேயத் தேய, கருப்ப வழிகளின் கனவுகள் வளரத் தொடங்குகின்றன. எஞ்சி யுள்ள தொண்ணுாறு தினங்களும் அவர்கட்கு ஒரு பொருட் -ாகத் தோன்றுவதில்லை. பிரசவம் என்பதுஒேரு நிகழ்ச்சி எனும் குடும்ப நலப் பண்பு அவர்கள் உதிரத்தில் இப்பொ ழுது பூரணமாகப் பண்பட்டு, அதன் பலனாக, எதிர் காலத்தில் அவர்களுக்கு எவ்வித அச்சமும் தோன்றாமல் ஒர் ஆர்வமே தோன்றும். குழந்தைகளுக்கு வேண்டிய குல்லாய், சட்டைகளைப் பின்னி முடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள். முதல் மாதத் திலிருந்தே தங்களுள் எதிரொலி பரப்பிவரும் தாலாட்டுப் பாடல்கள் இப்போது அவர்களது வெளிறிய உதடுகளி னின்றும் புதிய ஜீவனுடன் வெளியேறிக் கொண்டேயி ருக்கும். குழந்தைப் பாடல்களைப் படிக்கவும் பாடவும் கேட்கவும் ஒரு தூண்டுதல் கிளர்ந்தெழும், புரளும் சிசுவின் தோல் நன்கு படர்ந்து கொழுப்பு உண்டாகி யிருக்கும். சிசுவின் கால் உதைப்பு மிகுதிப்படும். வயிறு பெருக்கும். வயிற்றின் தோல் நிறம் கறுப்படையலாம். முகமும் அவ்வாறே லேசாகக் கறுப்படையும். இது தற்.