பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பிரசவ கால ஆலோசனைகள் ஒன்பது மாதம் தாண்டிவிட்டாலே தாய்க்கு சதா குழந்தைக் கனவுகளாகவே தோன்றும்; மழலை ஞாபக மாகவே இருக்கும். பட்ட கஷ்டங்களுக்குரிய பரிசினைத் தரிசிக்கப்போகும் நன்னாளை ஒவ்வொரு கணமும் அத்தாய் மனம் எதிர்பார்த்திருக்கும். இனிய நற்பொழுது இது o கருப்பையைச் (Uterus) சுற்றிலும் சிசு நகர்கிறது. பொழுதின் 95% இல் சிசு, தலையைக் கீழே கொண்டு தான் வளருகிறது. பத்தாம் மாதம் பிறந்ததும் பிரசவத்திற்குரிய இடுப்பு வலி அவரவர்களின் கருப்ப நிலைக்கு ஏற்ப அடிக்கடி தோன்றித் தோன்றி மறையும். கருப்ப வாசம் துறந்து வெளியேறத் துடிதுடிக்கும் அல்லவா சிசு! அதன் போராட்டத்திற்கு அறிகுறிதான் இவ்வலி! ஒன்பதாம் மாதத்தின் கடைசியில் பிரசவமாகி பிள்ளை பிறக்காதிருந்தால், அக் கர்ப்பவதியின் வயிறு தளரத் தொடங்கிவிடும். இதைக் கொண்டு மருத்துவச்சி கள் ப்ரசவ தருணத்தைக் கச்சிதமாகச் சொல்லிவிடுவார் கள். டாக்டர்களும் சோதனை மூலம் சரியாகக் குறித்து விடுவார்கள். - பிரசவ நாள் நெருங்க நெருங்க அடிக்கடி சிலருக்கு மூத்திரம் கழிக்க விருப்பம் ஏற்படும். நடப்பதற்கும் கஷ்டப்படும். மர்ம ஸ்தானத்தின் வழியாக தெளிவான பசை போன்ற ஒரு திரவம் வெளிப்படுவதும் உண்டு. குழந்தையின் தலைப்பாரம், இடைக் குழியிலுள்ள கருப் பைகளின் மீதும் மூத்திரப் பையின் மீதும் தாக்கப்படுவ தால் இவ்வியாதி உண்டாகும். மார்பகங்களினின்றும் கூட ஒரு விதத் திரவம் கசியும். . . . . . . . . கர்ப்பாசயம் சுருங்குவதால் சிலருக்கு இடுப்பு நோய் நீடிக்கும். இதைப் பிரசவ வேதனை என்று நம்பி ஏமாறக்