பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 77 கூடாது. முதலில் தீவிரமாகத் தொடங்கி, பிறகு சற்றைக் கெல்லாம் நின்றுவிடுவது பொய் வலி. வலியை உத்தேசித்து, அதற்கு அஞ்சிக்கொண்டு உணவைத் தள்ளவே கூடாது. உணவுடன் பால், பழங் களை நிறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். பிரசவ வலியைத் தாங்குவதற்குப் பலம் வேண்டுமே! பிரசவ வேதனையின் தொடக்கத்தில் முதுகின் அடி யில் லேசான நோவு உண்டாகும். பிறகு நின்று, மீண்டும் வெகு நேரம் சென்று தொடங்கும். முதுகெலும்பின் அடிப்பகுதியில் திடீரென்று தீவிரமான உபாதை உண் டாகி, நரம்பு வலியோவென ஐறும்படி அத்துணை அதிக மாக இருக்கும். பின்னர் இவ்வலி மாயமாய் மறைந்து விடும். அப்பால், வழக்கம்போல் சாதாரணமாக இருக்க முடியும். - - - பின்னர் சில சில நிமிஷ இடைவேளைகள் விட்டு விட்டு, இடுப்பு வலி தோன்றும். பிரசவம் ஆகிவிடும் என்பதற்குச் சரியான அறிகுறிகள் தென்பட்டுவிட்ட தாகவே எண்ணப்படும். சிலருக்கு இப்போது சொற்ப உதிரம் படுவதுண்டு. நோயுண்டாகும்போது, வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால், தசை நார்கள் இறுகுவதை உணரலாம். இவ் விதம் இறுகுவதால், கர்ப்பத்திலுள்ள குழந்தை மிதக்கும் படியான திரவம் நிரம்பிய பை-பனி நீர்ப்பை கீழே நோக்கித் தள்ளப்பட்டு கர்ப்பப்பையின் வாய்-கர்ப்பமுகம் அகல்கிறது. இதுவே பிரசவத்தின் முதல் அங்கம். இந் நிலை மணி முதல் 24 மணி நேரம் வரையில் நீடித்திருப்ப துண்டு. இக்காலத்தில் நோயெடுக்கும் தருணம் தவிர, மற்ற நேரத்தில் எந்த ஒர் உபாதையும் இராது. ஒவ் வொரு தடவையிலும் வலி உண்டாக உண்டாக கர்ப்ப