பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 89. வயிற்றுப் போக்கு ஜீரணமாகாததன் விளைவாக இது ஏற்படும். உணவு. விஷயத்தில் கவனமும் நல்ல தூக்கமும் அவசியம். இரண்டு பலம் சுக்கைத் தட்டிச் சாறு பிழிந்து அதில் ஒரு தேக்கரண்டி சுத்தமான வீட்டு விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் குணம் உண்டாகும். - ஜுரங்கள் திடுதிப்பென்று தோன்றும் குளிர் ஜூரம் போன்ற வையும் கர்ப்பவதிகளைப் பீடிக்கும். திரும்பித் தாக்கும். காய்ச்சலும் (relapsing fever) வரும். இவற்றின் சேட்டை களால் குறைப் பிரசவம் அல்லது அகாலப் பிரசவம் 'நேரிடும். பிரசவம் நெருங்க நெருங்க இம்மாதிரி ஜுர வகைகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். - கபவாத ஜூரத்தினால் கர்ப்பம் கலைந்துவிடும். சிசு பிழைப்பது துர்லபம். - விஷக் காய்ச்சலான சளிஜுரம் போன்றவற்றில், கபவாதம் ஏற்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும். கூடியரோகம் முதலியன காசம், ரத்த சோகை போன்ற தொந்தச் சீக்குகளால் தாய்க்குத்தான் தொல்லை கூடுதல்; குழந்தைகளுக்கு. பாதகம் விளைவதில்லை எனலாம். ஆனால் ரத்த ஒட்டம், சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளால் சிசு மரணம்தான் அளவிறந்தது. சர்மவியாதிகளும் பயம் செறிந்தவைதான். சீதபேதி, வாந்திபேதியும் அகாலப் பிரசவத்துக்கு வழிகோலி, சிசுக்களை உண்டு விடும்.