பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பிரசவ கால ஆலோசனைகள் மேகநீர் நோய் இந்நோயும் கர்ப்பத்துக்கு பாதிப்பை விளைவிக்கும் பயங்கரத் தன்மையுள்ளதாகும். இந்நோயின் கெட்ட விளைவாக, கருப்பைக்குள் சிசு அழுகிப் போவதும், அகாலப் பிரசவம் ஆவதும், பிறக்கும் குழந்தைக்கும் மேக நீர் பற்றுவது உண்டு. இந்நோய் பற்றப்படும் குழந் தைக்குத் தாய்ப்பால்தான் அரணாகும். படர்குழிப் புண் கர்ப்ப ஸ்திரீகளின் பிறப்புறுப்புப் பாதையின் வெளிப் புறத்திலும் அரை இடுக்குகளிலும் இந்நோய் ஏற்படு மாயின், உடனடி நிவாரணம் கொடுக்க வேண்டும். வெட்டை வெட்டை வியாதியும் கர்ப்பத்தைக் கிளறிவிட்டு விடும். இடுப்புவலி எடுக்கும் போதும் சரி, பிரசவிக்கும் நேரத்திலும் சரி, அதன் பிறகும் சரி, இந்நோய் ஆட்டிப் படைக்கும். டாக்டர்களை நாடிச் சிகிச்சை பெற வேண்டும். எலும்பு ரோகம் உடல் நலவழிக்கு மிகவும் தேவைப்படுகிற சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் ஊடுருவிச் செல் லவோ, மேனியில் படவோ த்வறி விட்டாலும் குடியிருப்பு சுகாதார வசதி கெட்டிருந்தாலும், உடல் வளப்பத்திற்கு வேண்டிய உயிரூட்டச் சத்துகளும் உலோகச் சத்துகளும் உணவில் குறைந்து விட்டாலோ, உள்நீர் சுரப்பிகள் பலவீனமடைந்து, அதன் காரணமாக, சினைப்பைகள்பீஜமூலச் சுளைகள், தைராய்டு, பேராதைராய்டு போன்ற சுரப்பிகள் சோர்வடைந்து, உடல் நலத்தைச் சீர்கெடச் செய்கின்றன. - -