பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 91 இந்தக் காரணங்களால் எலும்பு ரோகம் உண்டா கிறது. எலும்புகளின் வலி, முதுகிலும் இடுப்பிலும் நோவு, கூபகக் கூட்டில் எலும்பு வலி போன்றவை உண்டாகும். இந்நோய் கண்ட கர்ப்பிணிகள் டாக்டர்களை அணுக வேண்டும். - போதிய சூரிய வெளிச்சம் பெற வழி செய்து கொள்ள வேண்டும். வைட்டமின் ஏ-டி-சத்துள்ள உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிட வேண்டும். மீன் எண்ணெய், பால், இறைச்சி மூலம் இச்சத்து கிட்டும். இந்நோய் கண்டால், இவர்களுக்கு பிரசவ பயம் ஏதுமில்லை. கஷ்டமான பிரசவம் சம்பவித்தால் சிசேரியன் ஆபரேஷன்' என்னும் அறுவை சிகிச்சையின் {Scissarian Operation) esp¢wib, 5 Taouuqob Ġ#@ouuuqtb காப்பாற்றலாம். இந்நோய் கொண்ட கர்ப்பிணியின் சிசுவுக்கு பாலுடன் மீன் எண்ணெய் சேர்த்தக் கொடுக்க 361soróip. 913 perior &l frégir (Uitra Violet rays) வைத்து எலும்புகளையும் தசைகளையும் வலிவுறப் பண்ணமுடியும். - ரத்தப்பெருக்கு தாய்மைப் பக்குவம் எய்திய பிறகு, உதிரப்பெருக்கு (bleeding) முதல் மூன்று மாதங்களில் ஏற்பட்டால், கர்ப்பச் சிதைவு ஏற்படும். கர்ப்பப்பையில் நஞ்சு வளர்ந்து உரிய இடத்தில் ஒட்டிக் கொள்ளுவதற்கு முன் இந்நிலை ஏற்படும். பிரசவ காலத்திலும் ரத்தப்பெருக்கு அதிகப் படும். சிலருக்கு ஆறாவது ஏழாவது மாத்த்திலும் உண்டாகும். இதனால் சிசு பாதிக்கப்படும். ஆகவே உடன் நிவாரணம் தேவை. தகுந்த சிகிச்சை பெற்றால் தான், இம்மாதிரி குறைகள் மீண்டும் கர்ப்பம் தரிக்கும் காலத்தில் உண்டாகாமல் இருக்க முடியும். -