பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பிரசவ கால ஆலோசனைகள்: ரத்த வாந்தி தொடக்கத்தில் சிலர் ரத்த வாந்தி எடுப்பார்கள். கர்ப்பகாலத்தில் மாதவிடாயின்போது ஏற்படும் கழிவு: உதிரப்போக்கு-நின்றுவிடுகிறதல்லவா?-அதனால் இது உண்டாகிறது. உணவு ஊட்டம் இதைச் சமனப் படுத்தும். - மார்பகநோவு பிரசவம் நெருங்கும் காலத்தே தாய் தனக்குப் பிறக்க விருக்கும் சிசுவுக்குப் பாலமுதம் ஊட்டுவதற்கான நிலையை அடைந்து வரும்போது, மார்பகங்களில் வலி ஏற்படும். மார்பகங்கள் கெட்டி பாய்ந்துவிடும்; தினவு உண்டாகும். மார்பகங்களைக் குளிர்ந்த தண்ணீரால் நன்கு கழுவிச் சுத்தம் செய்த ஈரத்துணியைச் சற்று நேரம் அப்பகுதிகளில் போர்த்தி வைத்துவிட்டால், நிவாரணம் கிட்டும். . r தலைநோய், ரத்தம் கெட்டு இந்நோய் ஏற்படும். நீர்க்கட்டும் தலையாய காரணம். ஒரு நாளைக்கு இரண்டுபடி நீர் பிரிய வேண்டும். வாரம் ஒரு தட்வை நீர்ப் பரிசோதனை செய்து கொண்டு, உணவு முதலியவற்றில் எச்சரிக்கை. கொள்ளல் அவசியம். - . . குளுப்பை ரத்தக் குறைவு நோய், இது. சோகை என்பார்கள். ஐந்தாவது மாதத்திலிருந்தே கைகால், முகம் வீங்கிவிடும். மருத்துவ சிகிச்சைக்கு உரியது இந்நோய். -