பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம்‌ விக்கிரகம்‌

75

பார். உனக்குத் திரவியம் அகப்படும்" என்று சொன்னதாக ஒரு சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு அந்தப் பிரகாரம் அவன் வெட்டிப் பார்க்க, பளிங்கினால் கட்டப்பட்ட இரண்டு நில அறைகளைக் கண்டான். அந்த அறைகளில் ஒன்றில், தங்க நாணயங்கள் நிறைந்திருந்தன. மற்றொன்றில் ஒன்பது தங்கப் பீடங்களும், அவைகளுள் எட்டுப் பீடங்களில் எட்டு வயிர விக்கிரங்களும் இருந்தன. அந்த ஒவ்வொரு விக்கிரகமும் ஒரே வைரத்தினாலே செய்யப்பட்டதாயிருந்தது. ஒன்பதாவது பீடத்தில், ஒன்றுமில்லாமல் வெறுமையாயிருந்தது. அதில் அடியிற் கண்டபடி எழுதப்பட்டிருந்தது: "மகனே! அந்த எட்டு வைர விக்கிரங்களையும் வெகு கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன்; உலகத்தில் ஒன்பதாவது விக்கிரகம் ஒன்று இருக்கின்றது; அது எட்டு விக்கிரகங்களைப் பார்க்கிலும் ஆயிரம் பங்கு சிரேஷ்டமானது; அது உனக்கு வேண்டுமானால், கேரோ பட்டணத்துக்குப் போய் அவ்விடத்திலிருக்கிற என்னுடைய ஊழியக்காரனைக் கண்டால், அவன் அந்த ஒன்பதாவது விக்கிரகம் கிடைப்பதற்குத் தகுந்த மார்க்கத்தைச் சொல்லுவான்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் அந்த ராஜகுமாரன் கேரோ பட்டணத்துக்குச் சென்று, ஊழியக்காரனைக் கண்டு, அவன் மூலமாக ஒரு வேதாளத்தினுடைய தயவைச் சம்பாதித்தான். அந்த வேதாளத்தைப் பார்த்து ஒன்பதாவது விக்கிரகம் தனக்குக் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்தான். அந்த வேதாளம் அவனைப் பார்த்து, "பதினைந்து வயதுள்ளதாகவும், அதிரூப லாவண்ணியமும் நிர்த்தோஷமும் உள்ளவளாயும் ஒரு பெண்ணை எனக்கு நீ சம்பாதித்துக் கொடுத்தால், உனக்கு ஒன்பதாவது விக்கிரகம் கிடைக்கும்; நீ பெண்களுடைய குணத்தை அறியும் பொருட்டு, ஒரு கண்ணாடி கொடுக்கிறேன். ஒரு பெண்ணைப் பார்த்த உடனே அந்த கண்ணாடியைப் பார். அவள் களங்கம் உள்ளவளாயிருந்தால், அந்தக் கண்ணாடியிலும் களங்கந் தோன்றும். அவள் நிஷ்களங்கமா யிருந்-