xi
மாத்யூ ஆர்னால்டைப்போல, வேதநாயகமும், “வாழ்க்கையை நிலையாகக் கண்டார். வாழ்க்கை முழுவதையுமே கண்டார்.”
கேட்கக் களிப்பூட்டும் தேன் போன்ற அவரது நாமம் என்றைக்கும் எங்கேயும் எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும்.
அவரது வாழ்வு நம்மில் ஒவ்வொருவருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழல் வேண்டும். அவருடைய பாடல்கள், நூல்கள், பாடப்படவும், படிக்கப்படவும் வேண்டும்.
வாழ்க, வேதநாயகர் நற்பெயர்!
மாயூரம் திரு. ச. வேதநாயகம் பிள்ளையவர்கள், ஒரு சிறந்த அறிஞர். தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகளில் மிகப் பழைய தொண்டர், ஒரு சிறந்த நூவாசிரியர். உயர்ந்த கவிஞர், நல்ல நீதிபதி. ஒழுக்கமுடையவர்.
அவர்தம் உயரிய குணங்களை அவர் செய்த நூல்கள் இன்றும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. சில நூலாசிரியர்களின் நூல்கள் அவ்வக் காலத்தில் மட்டுமே பயன்படுபவை. அறிஞர் வேதநாயகம் பிள்ளையின் நூல்கள். என்றும் உயிர் உள்ளவையாக நின்று பயன்படுபவை.
தமிழகம் அறிஞர் திரு. வேதநாயகம் பிள்ளையவர்களை மறக்காது; மறக்கவும் கூடாது; மறந்தாலும் வாழாது. இலக்கிய உலகத்திலேயே ஒரு புதிய வழியைக் காட்டி, நாட்டின் நலன் ஒன்றையே கருதி, உயர்ந்த குறிக்கோள்களுடன் சிறந்த தொண்டாற்றிய திரு. பிள்ளையவர்களின் மறைவு நாளை நிளைவு நாளாகக் கொண்டாடி, அவர் காட்டிய நெறியில் நின்று நல்வாழ்வு வாழ வேண்டியது. நம் ஒவ்வொருவரினுடையவும் கடமையாகும்.