பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேதநாயகர் ஒரு வித்தகர்

-அருள் தந்தை சி.கே.சுவாமி-
திருச்சி, புனித சூசையப்பர் கல்லூரி முதல்வர்

வேதநாயகரின் வாழ்க்கை ஏட்டை விரிக்கும் பொழுது நம்மை வியப்பில் ஆழ்த்துவது அவரது தமிழ்த் தொண்டேயாகும். துறவிகள் சார்பிலே தமிழ் இலக்கியத்தின் தூணென விளங்கியவர் வீரமாமுனிவர் என்றால், இல்லறத்தார் சார்பிலே இலக்கிய வானிலே மின்னிய ஒளி விளக்கு வேதநாயகர் எனலாம். தமிழ்த் துறையிலே ஈடுபட்டவர் தமிழில் நூல் பல செய்வது பற்றி நாம் வியப்படைவதில்லை. ஆனால் அரசாங்க அலுவல்களில் ஈடுபட்டிருந்த ஒருவர். முதலில் பத்திரங்களைப் பத்திரப்படுத்தும் பணியிலும், பிறகு மொழி பெயர்ப்பு வேலையிலும், இறுதியில் நியாயம் வழங்கும் நீதிபதி வேலையிலும் ஈடுபட்டிருந்த ஒருவர் - தன் ஓய்வு நேரத்தையெல்லாம் தமிழுக்கென ஒதுக்கிவைத்து, ஒப்பரும் இலக்கியங்களைப் படைத்துள்ளது பாராட்டுக்குரிய செய்தியாகும்.

மேல் நாட்டிலும் சரி, கீழ் நாட்டிலும் சரி, ஒரு துறையில் தேர்ந்த வல்லுநரைக் காணலாம். கவிதை செய்யும் கவிஞன் ஒருவன் உரைநடையில் ஒப்பற்றவனாய் விளங்குதல் அரிது; கதையாசிரியனுக்குக் கவிதை ஊற்று வறண்டே தோன்றும்; கட்டுரையாளன், கற்பனை வானிலே பறப்பது கடினம், ஆனால், வேதநாயகரோ தொட்ட துறையெல்லாம் துலக்கும்படிச் செய்து கதை, கட்டுரை, கவிதை என்ற

எல்லாத் துறைகளிலும் வல்லுநராய் விளங்குகிறார்.

.