பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெட்ட பெண்ணைத் திருதுதல்

139

இதை வியாபாரி கேட்டுக் கொண்டிருந்ததால் அவனுக்குப் பெருஞ்சிரிப்பு வந்து விட்டது. அப்போது கூட இருந்த அவன் பத்தினி யுஏன் சிரிக்கிறீர்கள்?ரு என்று கேட்க யுமாடும் கழுதையுஞ் செய்துகொண்ட சம்பாஷணையைக் கேட்டுச் சிரித்தேன். அதை உனக்குச் சொன்னால் என் பிராணன் போய்விடும்ரு என்றான். அவள் யுநீங்கள் அதனைச் சொல்லாவிட்டால் என் பிராணன் போய்விடும்ரு என்று சொல்லி அன்ன ஆகாரமில்லாமல் ஒரு அறைக்குள்ளே போய்ப் படுத்துக்கொண்டு அழுதாள். புருஷன் என்ன நியாயஞ் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளுடைய தாய் தகப்பன் முதலானவர்கள் வந்து அவர்களாலே கூடிய வரையில் புத்தி சொல்லியும் அவள் கேளாமற் பிடிவாதஞ் செய்தாள். அப்போது அந்த வீட்டிலிருந்த ஒரு சேவலும் ஐம்பது பெட்டைக் கோழிகளும் கூடிக் கொஞ்சிக் குலாவிக்கொண்டு திரிவதைப் பிரமாணிக்கமுள்ள ஒரு நாய் பார்த்து யுசேவலே1 சேவலே! நம்முடைய எசமானியும் எசமானிச்சியும் மனஸ்தாபக் கொண்டு வருத்தப் படுகிற காலத்தில் நீ உன் பெண்சாதிகளுடனே கூடிக் கொண்டு கொட்டம் அடிக்கிறாயே! இது அழகா?ரு என்று கேட்க, அந்தச் சேவல் நாயைப் பார்த்து யுநம்முடைய எசமான் முழுமூடன். ஒரு பெண்சாதியை அடக்கி ஆள அவனுக்குத் திறமையில்லை. நான் ஐம்பது பெண்சாதிகளை அடக்கி ஆளவில்லையா? எசமான் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு கழியை எடுத்துக்கொண்டு பெண்சாதிக்குத் தகுந்தபடி பூஜை கொடுத்தால் அவள் உடனே அடங்குவாள்ரு என்று சொல்லிற்று. அதைக் கேட்டுக்கொண்டிருந்த எசமான் நல்ல உபாயமென் றெண்ணி, ஒரு பெரிய கழியை எடுத்துக்கொண்டு பெண்சாதி படுத்துக்கொண்டிருந்த அறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டு மர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தான். அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது போல்,