பக்கம்:பிராயச்சித்தம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 லா. ச. ராமாமிருதம் 'இல்லை மணி, நான் வேலையைப்பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை." மணிக்கு ஆவேசம் வந்துவிட்டது. வாயில் நுரை தள்ளாத குறைதான். கைஆட்டலில் மார்ச்சதை, தொந்தி, விலாச்சதைகள் குலுங்கின. 'தவிடு தின்கறதுலே ஒய்யாரம் வேறையா? நல்லது செய்யப்போய் கொடுக்கற கையைக் கடிக்கறையா? நாளைக்குத் தர்மகர்த்தாவுக்கு என்ன பதில் சொல்றது?" "அது உனக்குத்தான் தெரியணும்.’’ "அடே நீ என்னிக்குமே டேஞ்சர் ஆச மின்னு எனக்குத் தெரியும். பழுதையாக் காட்டி பாம்பாய்க் கடிக்கற ஆசாமி.' 'உன்னை நான் என்ன செய்தேன் என்று தெரிய வில்லை. ஆனால் இந்தக் கோபம் உன் ...ம்புக்கு நல்லதல்ல 8.P......' "ஆமாம், என் 8.P. பத்தி உனக்கு ரொம்பக் கவலை பாரு! எனக்கு 8.P.யினால்தான் கோபம் வரது. கோபம் வருவதனால்தான் B.F. ஏறுகிறது. மணி சிரித்துவிட்டான், 'சரி தருமு. உன் இஷ்டப்படி செய், எக்கேடு கெட் டுப்போ! அண்ணன் தம்பி ஆற்றுவெள்ளம்னு சொல்வா. என்ன சண்டை போட்டாலும் ரத்தபாசம் கேட்கல் லியேடா. சரி, இந்தா இதைப்பிடி...' "என்னது?’’ 感线 g ബ , * 邸 ?? ہے s و قمہ ^ . ஞ்சுரூவா, தட்டுக் காசுலேருந்து ஏதோ யதா § & சக்தி... ‘'வேண்டாமப்பா, நீயே வெச்சுக்கோ. '