பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பிற்காலச் சோழர் சரித்திரம் இவ்வேந்தன் மலையாள தேசத்தில் வள்ளுவ நாட்டி லுள்ள முட்டம் என்னும் ஊருக்கு மும்முடி சோழநல்லூர் என்று பெயரிட்டு, அதனை அந்நாட்டில் திருநந்திக்கரை யிலுள்ள கோயிலுக்கு இறையிலியாக அளித்துத் தான் பிறந்த ஐப்பசித்திங்கள் சதய நாளில் விழா நடத்துமாறு ஏற்பாடு செய்துள்ளமையால் , இவன் ஐப்பசித் திங்களில் சதய நாளில் பிறந்தவன் என்பது பெறப்படுகிறது. இவன் ஆட்சிக்காலத்தில், திருவெண்காட்டிறைவர்க்கு ஆண்டு தோறும் ஐப்பசித் திங்களில் ஏழு நாட்கள் சதய விழா நடைபெற்றதென்று அவ்வூர்க் கல்வெட்டொன்று 2 கூறு வதும் இதனை உறுதிப்படுத்துகின்றது. ஆகவே, ஐப்பசித் திங்களில் சதய நாளிலே இவன் பிறந்தவன் என்பது தேற்றம். எனவே, ஆவணித் திங்கள் சதய நாளில் இவன் பிறந்தவன் என்பார் கூற்றிற்குச் சிறிதும் ஆதார மின்மை காண்க. இவ்வரசன் பிறந்தபோது ஆதிசேடன் மனைவியராகிய நாகர்குல் மகளிர், தம் கணவற்கு இனி நிலப்பொறை குறைந்துவிடும் என்னும் உவகை மிகுதியால் நடித்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன . அன்றியும், அச் செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு சக்கரக் குறிகள் அமைந்திருந்தன என்று புகழ்கின்றன . அவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், இவன் 1. ' ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல......செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோ இராசராச கேசரிவன்மர்க்கு யாண்டு பதினெட் டாவது- இராசராசத் தென்னாட்டு வள்ளுவ நாட்டு முட் டம் முட்டமென்னும் பேரைத் தவிர்த்து மும்முடி சோழ நல்லூரென்று பேராக்கி இந்நாட்டுத் திருநந்திக்கரை மாதேவர்க்குப் பெருமாள் ஐப்பிசைச் சதயத்தினாள்.. ....... திருவிழாவெடுத்து....... (Travancore Archaeological Series, Vol. I. p. 292) 2. ' S. I. I., Vol. V, No. 979. 3. Ibid, Vol. III, No. 205, Verse 63. 4. Ibid, Verse 61.