பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 109 தடிகைபாடியும் இராசராச சோழனுக்கு உரியதாயிற்று. இராஷ்டிரகூடர்கள் வலிகுன்றிக் கிடந்தமையாலும் கங்கரை யும் நுளம்பரையும் ஆதரித்து உதவி புரிவார் எவரும் இல்லாமையாலும் நம் இராசராசன் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி என்னும் நாடுகளை எளிதில் கைப்பற்றிக் கொண் டான். மைசூர் இராச்சியத்தில் கி. பி. 991-ஆம் ஆண் டில் வரையப் பெற்ற சோழ நாராயணன் கல்வெட் டொன்று உளது. அதில் குறிப்பிடப்பட்ட சோழ நாராய ணன் என்பான் இராசராச சோழனேயாவன் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து 1. அஃதுண்மை யாயின் அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசராசன் ஆட்சி யின் ஆறாம் ஆண்டாகிய கி. பி. 991-க்கு முன்னர் நடைபெற்றனவாதல் வேண்டும். சோழர் படைகட்குத் தலைமை வகித்து அப்போர்களை நடத்தியவன் இராசராச சோழன் புதல்வனாகிய முதல் இராசேந்திர சோழனே யாவன், மும்முடிசோழன் பெற்ற களிறு மலையம், கொண்கானம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியமையோடு சேரனையும் நாட்டை விட் டோடும்படி செய்தது என்று மைசூர் இராச்சியத்திலுள்ள இராசராச சோழனது எட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று கூறுவதும் அச்செய்தியை வலியுறுத்துதல் காண்க. அவ் வரசகுமாரன் இளமையில் கங்க மண்டலத்திற்கும் வேங்கி மண்டலத்திற்கும் மாதண்ட நாயகனாக இருந்தான் ; அன்றி யும் தன் தந்தையால் அளிக்கப்பெற்ற பஞ்சவன் மாராயன் என்ற பட்டமும் பெற்றிருந்தான்.3 இராசராச சோழனால் வென்று கைக்கொள்ளப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பது இவனது . திருமகள் 1. The Colas, Vol. I, Page 207. 2. Ep. Carnatica, Vol. III, Sr. 140. 3. Ibid, Vol. III, Sr. 125.