பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசராச சோழன் 141 திருநாவுக்கரைய தேவர், நம்பியாரூரர், நங்கை பரவை யார், மெய்ப்பொருள் நாயனார், சிறுத்தொண்ட நாயனார் என்போர்க்குச் செப்புப் படிமங்கள் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்களும் அளித்துள்ளனன். இச் செயல், இவன் சமய குரவர்களிடத்தும் சிவனடியார்க ளிடத்தும் வைத்திருந்த பேரன்பினை நன்கு புலப்படுத்துவ தாகும். அன்றியும், சிவனடியார்களுள் மெய்ப்பொருள் நாயனார்க்கும் சிறுத்தொண்ட நாயனார்க்கும் இவன் பெரிய கோயிலில் படிமங்கள் எழுந்தருளுவித்தமைக்குக் காரணம் அவ்விருவருஞ் செய்த செயற்கருஞ் செயல்கள் இவன் உள்ளத்தைப் பிணித்தமையேயாம். மெய்ப்பொருள் நாயனாரது படிமத்தை வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டில் அவ்வடியாரது பெயரைக் கூறாமல் ' தத்தா நமரேகாண் என்ற மலாடுடையார்' என்று இவன் குறிப்பிட்டிருப்பது அவர்பால் இவனது உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த அன்பின் முதிர்ச்சியை இனிது உணர்த்து வதாகும். இவன் தன் அரசனிடத்தும் பேரன்புடைய வன் என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராச சோழன் உலோகமாதேவி ஆகிய இருவர் படிமங்களும் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்களும் கொடுத் திருப்பதனால் நன்கு விளங்கும்.' இவன் கி. பி. 995-ஆம் ஆண்டில் திருச்சோற்றுத்துறைக் கோயிலில் நாள்தோறும் தேவாரப்பதிகம் பாடுவோர்க்கு நிவந்தமாகப் - பொன் அளித்துள்ளனன். ஆகவே, இவன் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டு ஒழுகியவன் என்பது ஒருதலை. இராசராச 1. S. I. I., Vol. II, Nos. 38, 40 and 43. 2. 'பாதாதிகேசாந்தம் இருபதிற்றுவிரல் உசரத்து இரண்டு கையுடையராகக் கனமாகச் செய்த தத்தா நமரேகாண் என்ற மிலாடுடையார் ஒருவர் (2) இவர் நின்ற............ பீடம் ' ஒன்று '-(S, 1, I., Vol. II, No. 40) 3. S. I. I. Vol, II, No. 38. 4. Ibid, Vol. V, No. 611.