பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 149 அவற்றிற் கூறப்படும் இவன் வீரச்செயல்கள் அவை நிகழ்ந்த கால வரிசைப்படி அமையாமல் வேறுபட்டும் இருக்கின்றன. எனினும், அச்செப்பேடுகள் இவன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளை உறுதிப்படுத்து வதாலும் பண்டைச் சோழ மன்னர்களின் வரலாற்றைக் கூறுவதாலும் சரித ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவேயாம். இனி, இவ்வேந்தனது மெய்க்கீர்த்தியின் துணை கொண்டு இவன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண் பது அமைவுடைத்தேயாம். இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் யாண்டும் காணப் படவில்லை. மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில் இடை துறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம் என்பவற்றை இவன் வென்று தன்னடிப்படுத் திய செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள், இடைதுறை நாடு என்பது கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த ஒரு நாடாகும். இக்காலத்தில் பம்பாய் மாகாணத்தி லுள்ள ரெய்ச்சூர் ஜில்லாவே பழைய இடைதுறை நாடு என்று கொள்வது மிகப்பொருந்தும். அதனை, ' எடத் தோர் இரண்டாயிரம் ' எனவும் அந்நாட்டுக் கல்வெட்டுக்கள் கூறாநிற்கும். வ இனி, வனவாசி என்பது மைசூர் இராச்சியத்தின் வடமேற்குப் பகுதியைத் தன்னகத்துக்கொண்டு முற் காலத்தில் நிலவிய ஒரு நாடாகும். அது கங்கபாடிக்கு 1. ' நெடிதியலூழியுள் இடைதுறை நாடும் தொடர்வனவேலிப் படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும் நண்ணற்கருமுரண் மண்ணைக் கடக்கமும்' (மெய்க்கீர்த்தி) 2. Ep. Ind., Vol. XII, pp. 295, 296 & 308. 3. Ep. Ind., Vol, XII, p. 295.