பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பிற்காலச் சோழர் சரித்திரம் வடக்கிலும் நுளம்பபாடிக்கு மேற்கிலும் இருந்தது எனலாம். அதனை வனவாசிப் பன்னீராயிரம் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கொள்ளிப்பாக்கை என்பது ஹைதராபாத்திற்கு வட கிழக்கில் நாற்பத்தைந்து மைல் தூரத்திலுள்ள ‘ குல்பாக்' என்ற ஊராகும்.! ' கொள்ளிப்பாக்கை ஏழாயிரம்' என்று பிற்காலக் கல்வெட்டுக்கள் கூறுவதால் அஃது ஒரு நாட் டின் தலை நகராக இருந்திருத்தல் வேண்டும். அன்றியும் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் மகன் மூன்றாம் சோமேசுரன் என்பான் தன் தந்தையின் கீழ் அரசப் பிரதிநிதியாக அந்நகரிலிருந்து அதனைச் சூழ்ந்த நாட்டைப் பிற்காலத்தில் ஆட்சிபுரிந்து கொண் டிருந்தான் என்று தெரிகிறது ஆகவே, அது மேலைச் சளுக்கியரது இராச்சியத்தின் தென்பகுதியிலிருந்த ஒரு சிறந்த நகரமாதல் வேண்டும். ' சுள்ளிச் சூழ் மதில் கொள்ளிப் பாக்கை' என்று கல்வெட்டுக்கள் கூறுவதால் அது சிறந்த மதில் அரண்களையுடைய பெரிய நகரமாக அந்நாட்களில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண் ணம். மண்ணைக்கடக்கம் என்பது இராஷ்டிரகூடர்களுக்குத் தலை நகரமாயிருந்த மானிய கேடமேயாம். இக்காலத்தில் அது ' மால்கெட்' என்று வழங்குகின்றது. அந்நகர், இராஷ்டிரகூடர்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் வரையில் மேலைச் சளுக்கியர்க்கும் தலை நகரமாயிருந்தது. வடக்கே யிருந்த மாளவ தேயத்துப் பரமாரக்குலத்து மன்னர் களும் தெற்கேயிருந்த சோழ அரசர்களும் அந்நகரத்தின் மீது அடிக்கடி படையெடுத்துச்சென்று அழித்து வந்தமை யோடு அதனைப் பல்வகை இன்னல்களுக்கும் உட்படுத்தி வந்தனர். அதுபற்றியே மேலைச் சளுக்கியர்கள் அந்நக ரத்திற்கு வடகிழக்கில் நாற்பத்தெட்டு மைல் தூரத்தி 1. Ep. Ind., Vol. XII, p. 295.