பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 173 இலாமுரி தேசம் என்பது சுமத்ராவின் வடபகுதியி லிருந்த நாடாகும். அதனை இத்தாலிய யாத்திரிகரான மார்க்கபோலோ என்பார் லம்பிரி (Lambri) எனவும் அராபியர்கள் லாமுரி (Lamuri) எனவும் கூறியுள்ளனர். சீன தேயத்தினர், அதனை லான்வூலி (Lan-wou-li) என்று வழங்கியுள்ளனர்.1 - நக்கவாரம் என்பது நிக்கோபார் (Nicobar Islands) தீவு கள் என்று இக்காலத்தில் வழங்குகிறது. அதில் அடங்கிய அத்தீவுகள் வங்காளக்கடலில் உள்ளன. தென்னைகளுள் ஒருவகைக்கு நக்கவாரம்பிள்ளை என்னும் பெயர் இன்றும் வழங்குகிறது. ஆகவே, கடாரப் படையெடுப்பில் நம் இராசேந்திரன் கைப்பற்றினவாக மெய்க்கீர்த்தியில் சொல்லப்படும் நாடுகளும் ஊர்களும் சுமத்ராவிலும் மலேயாலிலும் அவற்றைச் சூழ்ந்தும் இருந்தனவாதல் வேண்டும். அவைகள் எல்லாம் சுமத்ராவில் அக்காலத்தில் நிலைபெற்றிருந்த ஸ்ரீவிசய ராச்சியத்திற்கு உட் பட்டிருந்தன என்பது திண்ணம். கடாரப் படையெழுச்சியைப் பற்றிக் கூறும் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியைக் கூர்ந்து நோக்குமிடத்து, அங்கே இவன் எய்திய வெற்றிகள் அனைத் தும் ஒரே படையெடுப்பில் பெற்றவை என்பதும் அதில் குறிப்பிடப்பெற்ற நாடுகளும் ஊர்களும் ஓர் அரசன் ஆளு கைக்கே உட்பட்டிருந்தன என்பதும் நன்கு புலனாகின்றன. ஸ்ரீவிசய ராச்சியத்திற்கு உட்பட்டிருந்தவையாகச் சீன தேயத்து நூல்களில் கூறப்பட்டுள்ள இடங்களும் இராசேந் திரன் கடாரப் படையெடுப்பில் கைப்பற்றினவாக மெய்க்கீர்த் தியில் குறிக்கப்பெற்றுள்ள இடங்களும் பெரும்பாலும் ஒத் திருத்தல் ஈண்டு உணரற்பாலது. நம் இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் எத்தனையோ போர்கள் நிகழ்த்தி வெற்றிபெற்றுள்ளானெனினும் இவன் கங்கையும் கடாரமும் கொண்டமைதாம் அக்காலத்தில் மக்கள் மனத்தையும் புலவர் உள்ளத்தையும் ஒருங்கே பிணித் துள்ளன. அவ்வெற்றிச் சிறப்பினை, 1. Ibid, Vol. 1, p. 263.