பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 2011 கூடும் என்று கருதற்கும் இடமுளது. அஃது எவ்வாறாயி னும் ஆகுக. கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டு களில் பாண்டியரும் சேரரும் இலங்கையரசர்களும் தமக் குள் மணவினையால் தொடர்புகொண்டு, நெருங்கிய உற வினராகித் தமக்குப் பெரும் பகைஞராயிருந்த சோழரை வென்று தம் தம் நாட்டைக் கைப்பற்றிச் சுயேச்சையாய் ஆட்சிபுரிய முயன்றுவந்தனர் என்பது ஒருதலை. ஆகவே, அவ் விக்கிரம பாண்டியன் வரலாறு ஏற்றுக்கொள்ளத் தக்கதேயாம். இனி, அவ் விக்கிரம பாண்டியன் ஈழநாட் டிலும் இராசாதிராசன்பால் தோல்வியுற்று மணிமகுடம் முதலானவற்றை இழந்தனன் என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. அவனை அயோத்தி யரசகுமார னாகிய ஜகதீபாலன் என்பவன் கி. பி. 1047-ல் போரிற் கொன்று அவனது ரோகண நாட்டைக் கைப்பற்றி, கி. பி. 1051 வரையில் அங்கு அரசாண்டனன் என்றும் அவனை யும் சோழர்கள் போரிற் கொன்று, அவன் மனைவியை யும் மகளையும் பிறசெல்வங்களையும் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்து விட்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின் றது. ஆனால் இராசாதிராச சோழன் கல்வெட்டுக்களில் ஜகதீபாலன் வரலாறு காணப்படவில்லை ; மற்றொரு வர லாறு சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுப்ஜத்தை யாண்ட வீரசலாமேகன் என்பவன் தன் நாட்டைவிட்டு ஈழம் புகுந்து, அதனை ஆண்டுவந்தபோது இராசாதி ராசன்பால் தோல்வியுற்று, தன் தாய், தமக்கை, மனைவி முதலானவர்களை விட்டுவிட்டுப் புறங்காட்டியோடினன் என்பதே. அவ்வீரசலாமேகன், பகைஞராகிய சோழரால் தன் குடும்பத்தார் பல அவமானங்கட்கு உட்படுத்தப்பட் டமையுணர்ந்து, அதனைப்பொறாமல் மீண்டும் போர் புரிந்து உயிர்துறக்கவே, அவன் பொன்முடி கைப்பற்றப் பட்டது என்றும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி கூறுகின் றது. ஒருகால், மகாவம்சம் கூறும் ஜகதீபாலனும் இரா சாதிராசன் மெய்க்கீர்த்தியுணர்த்தும் வீரசலாமேகனும் ஒருவனாகவே இருத்தல் கூடும். ஆனால், முன்னவன் அயோத்தி யரசகுமாரன் என்று மகாவம்சத்திலும் பின்னவன்