பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. முதல் இராசாதிராச சோழன் 211 நிகழ்ச்சிக்குச் சில ஆண்டுகட்குப் பின்னர் வரையப்பெற் றவையாகும். ஆயினும், அவற்றில் போரில் உயிர் துறந்ததாகக் கூறப்பட்ட பாண்டிய சோழன் இராசாதிராசனாக இருத் தல் வேண்டும் என்பதும் அப்போரும் கொப்பத்துப் போராகவே இருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரப் படுகின்றன. எனவே, சோழ மன்னர்களின் கல்வெட்டுக் களில் காணப்படும் குந்தள நாட்டுப் போர்ச் செய்திகளுள் சில, மேலைச்சளுக்கியர் கல்வெட்டுக்களாலும் உறுதி எய்துதல் காண்க இராசாதிராசன் போர்க்களத்தில் யானைமீதிருந்து உயிர் துறந்தமைபற்றிக் கல்யாணபுரமுங் கொல்லாபுர மும் எறிந்து யானைமேற் றுஞ்சின உடையார் விஜயரா சேந்திர தேவர் ' என்று சோழ மன்னர்களின் கல்வெட்டுக் களில் குறிக்கப்பட்டிருத்தல் அறியற்பாலதாகும். அன்றி யும், இவன் போர்க்களத்தில் உயிர் நீத்த செய்தி இவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டிலும் காணப் படுகின்றது.. இவன் இளமைப் பருவம் முதல் பெரு வீரனாகவே விளங்கினான். இளவரசனாயிருந்த காலத்தில் புற நாடுகள் பலவற்றின் மேல் படையெடுத்துச் சென்று அவற்றைத் தன் தந்தையின் ஆட்சிக்குள்ளாக்கிய செயல் ஒன்றே, இவன் ஆற்றலை இனிது புலப்படுத்தா நிற்கும். இவனது வாழ்க்கையே வீரம் நிரம்பிய ஒரு தனி வாழ்க்கை எனலாம். இவன், போர்க்களத்திலேயே தன் வாணாளின் இறுதியையும் எய்திப் புகழ் கொண்டமை குறிப்பிடத்தக்க தொன் றாம். இனி, இவன் மேலைச்சளுக்கியரது போர்க்களத்தில் வாகை சூடி அவர்களுடைய தலை நகராகிய கல்யாண புரத்தில் வீராபிடேகஞ்செய்துகொண்டு விஜயராசேந்திரன் 1. S. I, I., Vol. V, No.647.