பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 231 தென்னனைத் தலைகொண்டு சேரனைத் திறை கொண்டு சிங்கள தேசம் அடிப்படித்து வெங்களத் தாகவமல்லனை ஐம்மடி வென்கண்டு வேங்கை நாடு மீட்டுக்கொண்டு தன்னுடன் பிறந்த முன்னவர் விரதமுடித்து வந்து பணிந்த விஜயாதித்தர்க்கு மண்டல மருளிக் கழலடைந்த மன்னர்க்குக் கடாரமெறிந்து கொடுத்தருளிச் சோமேசுவரனைக் கன்னடதேசங் கைவிடத் துரத்தித் தன்னடியடைந்த சளுக்கி விக்கிரமாதித்தனை எண்டிசை நிகழக் கண்டிகை கட்டி இரட்டபாடி ஏழரை இலக்கமும் எறிந்துகொடுத்தருளி விஜய சிம்மாசனத்து உலகமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளின சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்' என்பதாம். இச்சிறு மெய்க்கீர்த்தி, பயன்படாப் புனைந்துரைகளின்றி இவன் வரலாற்றுண்மைகளை விளக்கிச் செல்லும் நிலையில் அமைந்துள்ளமை காண்க. இவ்வேந்தன் தன்னுடன் பிறந்த முன்னவர்போல் பேராற்றல் படைத்த பெருவீரனா யிருந்தமையால் இவ னது ஆட்சிக்காலம் முழுவதும் போரிலேயே கழிந்தது. இவன் தன் தமையன்மார் கொண்ட விரதத்தைக் தன் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிவிட்டதாகத் தன் கல் வெட்டுக்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அன் றியும், இவன் ' ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்டு ' 2 என்று தன் கல்வெட்டுக்களில் வரைந்திருப்பதால், மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனை இவன் போரில் ஐந்து முறை வென்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இவன் முடிசூடிய பிறகு கி. பி. 1063-ஆம் ஆண்டில் மறுபடியும் மேலைச்சளுக்கி யப்போர் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. 1. Charala Plates of Virarajendra Deva, Ep. Ind., Vol. XXV, p. 263. | 2. S. I. I., Vol. VII, No. 887.