பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பிற்கலச் சோழர் சரித்திரம் 1 எனவே தனமென் றிராசேந்திர சிங்கனோ டின் றணைந்த கனவே யுடையன் களிப்புக்கண் டாற்கட லேழுமமைந் தனவே யெனவவன் றானுதித் தன்றே தொடங்கியென்று நனவே புணர்திரு வின்களிக் கேதுகொ னல்லனவே. இரண்டாம் இராசேந்திர சோழன் 2தற்றுற் றன்றுவெம் போர் செய்த விற்கைப் பன்மன் முன் போடவோர் தத்திற் றுன்றுவன் பாய்பரி யுய்த்துத் தன் மெய்கொண் டோடிய வெற்றிச் செம்பியன் பார்புகழ் கொற்கைக் கண்டன்வன் பாரதம் வெற்புக் கொண்டு திண் போர்புரி கொப்பத் தன்றெதிர்ந் தோர்பெறு கொற்றத் தொங்கல் சிங் காதன மொற்றைச் சங்குவெண் சாமரை குத்துப் பந்தர்முன் பாவிய முத்துப் பந்திமுன் றான் மகிழ் ஒற்றைப் பெண்டிர் பண் டாரமொ டற்றைத் தன்பெருஞ் சேனையும் இட்டிட் டன் றுடைந் தான்வசை பட்டுக் கண்டவங் காரனே. (1) 1. வீரசோ. யாப்பு. 22 மேற்கோள் ; முதல் இராசராசன் காலத்தில் ஏற்பட்ட வளநாடுகளுள் இராசேந்திர சிங்கவள நாடும் ஒன்றாயிருத்தலால் இவனுக்கு இராசேந்திர சிங்கன் என்ற பெயரும் இருந்தது என்பது தெள்ளிது. 2. வீரசோ. யாப்பு. 34 மேற்கோள் ; இப்பாடலில் குறிப் பிடப்பெற்ற கொப்பத்துப் போரில் மேலைச்சளுக்கியரை வென்று வாகை சூடியவன் இரண்டாம் இராசேந்திர சோழனே என்பது கலிங்கத்துப்பரணியாலும் கல்வெட்டுக்களாலும் ஒட்டக் கூத்தர் இயற்றிய இரண்டு உலாக்களாலும் உறுதியாதல் உணர்க. இச்சரித்திர நூலிலும் இராசாதிராசன் ஆட்சியில் இப்போர் நிகழ்ச்சி நன்கு விளக்கப்பட்டுள்ளது.