பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் மின்னார் வடிவேற்கை வீர ராசேந்திரன்றன் பொன்னார் பதயுகளம் போற்றாது - கன்னாடர் புன்கூ டலசங்க மத்தினொடும் போருடைந்தார் மன்கூ டலசங்க மத்து. 'விண்கூ டலசங்க மத்துடைந்த வேல்வடுகர் எண்கூ டலறு மிருங்கானிற்- கண்கூடப் பண்ணினான் றன்னுடைய பாதம் பணியாமைக் கெண்ணினார் சேருமிடம். *வீரத்தால் விண்ணாதல் மெய்த்தவத்தால் வீடாதல் ஆரத்தா லாள்வதெவர் தாடேற்ற - சீரொத்த மின்னார் படைத்தடக்கை வீர ராசேந்திரனுக் கொன்னாராய் வாழ்வ துறின். *மரத்தினை யோரெழுத்துச் சொல்லுமற் றொன்று நிரப்பிட நீரிற்பூ வொன்றாம்-நிரப்பிய வேறோ ரெழுத்துய்க்க வீர ராசேந்திரனாட் டாறா மெனவுரைக்க லாம். சண்டு நூல் கண்டான் எழின் மிழிலைக் கூற்றத்துப் பூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே- மூண்டவரை வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்றன் சொல்லின் படியே தொகுத்து. 1. வீரசோ. அலங். 39 மேற்கோள். 2. வீரசோ. அலங் 39 மேற்கோள். ,, இது காவிரியைக் குறித்தல் காண்க. இப்பாடலிலுள்ள மிழலைக்கூற்றம் என்பது ‘ மாபைக்கூற்றம் ' எனவும் 'வீரன்' என்பது 'மாறன்' எனவும் வீரசோழிய அச்சுப் பிரதியில் காணப்படுகின்றன. மிழலைக் கூற்றத்துக் கீழ் கூற்றுப் பொன்பற்றி உடையான்' என்ற கல்வெட்டுத் தொடரும் ' தேர் வீரசோழன் திருப்பெயரால் ' - பூமேலுரைப்பன்' என்ற வீர சோழியப் பாயிரப்பாடற் பகுதியும் மேற்கண்டவாறு திருத்து வதற்குப் பெரிதும் துணையாயிருத்தல் காண்க. S. I. I. Vol. IV, No. 372, வரிகள் 103, 104 வீரசோழியப்பாயிரம், பா. 3.